செய்திகள் :

தமிழகத்தில் ரூ.6,929 கோடிக்கு 1,799 சாலைப் பணிகள்

post image

சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.6,929 கோடி மதிப்பில் 1,799 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான உத்தரவை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டை விபத்தில்லாத மாநிலமாக உருவாக்கிட சிறந்த கட்டமைப்புகள் அவசியமாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு விபத்துகள் அதிகம் நடைபெறும் குறுகலான வளைவுகள், சாலை சந்திப்புகளில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக, சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, சாலைகளை விரிவாக்கம் செய்வது, சாலைப் பாதுகாப்பு, புறவழிச் சாலைகள், இணைப்புச் சாலைகளை ஏற்படுத்துவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டங்களின்கீழ் மொத்தம் 1,799 பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன் மூலமாக, மாநிலத்தில் 3,268.53 கிமீ நீளச் சாலைகளின் தரம் மேம்படும். இந்தப் பணிகள் ரூ.6,929 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கு! சீமான் சரமாரி கேள்விகள்!

மடப்புரம் அஜித்குமாரின் கொலை வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினரைச் சந்தித்த... மேலும் பார்க்க

இனி ஒரு பட்டாசு ஆலை விபத்துகூட நடக்கக் கூடாது! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் க... மேலும் பார்க்க

திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் சாலை வலம்!

திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை வலம் (ரோடு ஷோ) மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் மக்கள் வரிசையில் திரண்டு நின்று மேள வாத்தியங்கள் முழங்க முதல்வரை... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

பி.எட். மாணவர் சேர்க்கை: ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு! முழு விவரம்!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதளவிண்ணப்பப் பதிவு ஜூலை 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவ... மேலும் பார்க்க

திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்... மேலும் பார்க்க