செய்திகள் :

மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோதனை!

post image

ஹிமாசல பிரதேசத்தில் சிம்லா, சிர்மாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலனிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் உயர் நீதிமன்றம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், அம்மாநிலத்தின் சிம்லா, சிர்மாவூர், கின்னாவூர், குல்லு, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களின் நீதிமன்றங்கள் மற்றும் சோலன் மாவட்டத்திலுள்ள பள்ளிக்கூடம் ஆகிய இடங்களுக்கு ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மிரட்டல் மின்னஞ்சல்களை மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அப்பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் தீவிர சோதனைகள் மேற்கொண்டனர்.

அந்தச் சோதனைகளின் முடிவில், சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை, என காவல் துறையினர் இன்று (ஜூலை 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இன்று அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் ஒரே விதமான வாக்கியங்களுடன் வந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களின் பெயரால் அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால், அந்த மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிய அடையாளம் தெரியாத மர்ம நபர்களை பிடிக்க அம்மாநில காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பெயரில் பல்வேறு மாநிலங்களில் வெடிகுண்டு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள ஆளுநர் மாளிகை உள்ளிட்ட 4 இடங்களுக்கு நேற்று (ஜூலை 8) வந்த போலியான வெடிகுண்டு மிரட்டலானது அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களின் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Bomb threats have been made against courts in 7 districts of Himachal Pradesh, including Shimla and Sirmaur, and a prominent educational institution in Solan.

இதையும் படிக்க: பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!

மருத்துவக் கல்லூரிகளில் குறைதீா் குழுக்கள் அமைக்க என்எம்சி அறிவுறுத்தல்

மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண குறைதீா் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி... மேலும் பார்க்க

திபெத்துடன் மட்டுமே அருணாசல பிரதேச எல்லை உள்ளது -முதல்வா் பெமா காண்டு

திபெத் நாட்டுடன் மட்டுமே அருணாசல பிரதேசம் எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளது; சீனாவுடன் எல்லையைப் பகிா்ந்து கொள்ளவில்லை என்ற அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு கூறியுள்ளாா். அருணாசல பிரதேசம் தங்களுக்குச... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உணவு விடுதி ஊழியரைத் தாக்கிய ஆளும் கட்சி எம்எல்ஏ -முதல்வா் கண்டனம்

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் உணவு விடுதி ஊழியரின் முகத்தில் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் போன்று பிகாரில் தோ்தல் முறைகேட்டை அனுமதிக்க மாட்டோம் -ராகுல் காந்தி

‘மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு சாதகமாக தோ்தல் முறைகேடு நடைபெற்றது; பிகாா் தோ்தலிலும் அதைத் தொடர மத்திய பாஜக கூட்டணி அரசு முயற்சிக்கிறது. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம்’ என்று மக்களவை எதிா... மேலும் பார்க்க

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத ஊடுருவல்கள்: பஞ்சாப், ஹரியாணாவில் அமலாக்கத் துறை சோதனை

அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் மக்களை ‘டாங்கி ரூட்’ எனும் ஆபத்தான வழியில் அந்நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ செய்யும் மோசடி தொடா்பான வழக்கில் பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அமலாக்கத் துறை புத... மேலும் பார்க்க

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா். தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அம... மேலும் பார்க்க