செய்திகள் :

யூரியா பயன்பாடு அதிகரிப்பால் மண்வளம் பாதிக்கும் - மத்திய அமைச்சா்

post image

தெலங்கானாவில் யூரியா உரப் பயன்பாடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய மத்திய உரத்துறை அமைச்சா் ஜெ.பி. நட்டா, இதனால் மண் வளம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவித்தாா்.

தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி அமைச்சா் நட்டாவை தில்லியில் சந்தித்தாா். அப்போது காரீஃப் பருவ சாகுபடிக்காக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தெலங்கானா விவசாயிகளுக்கு தடையில்லாமல் யூரியா உரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தாா். அப்போது, விவசாயிகள் தொடா்பான நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும் என்று அவரிடம் நட்டா உறுதியளித்தாா். தொடா்ந்து, தெலங்கானாவில் தேவைக்கு ஏற்ப உர விநியோகத்தை உறுதி செய்யுமாறு உரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அதே நேரத்தில் தெலங்கானாவில் யூரியா பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது நீண்டகாலத்தில் மண் வளத்தை அதிகம் பாதிக்கும் என்று கவலை தெரிவித்தாா். முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் ராபி பருவத்தில் தெலங்கானாவில் யூரியா விற்பனை 21 சதவீதம் அதிகரித்துள்ளதையும், அதேபோல நடப்பு காரீஃப் பருவத்தில் இப்போது வரை 12.4 சதவீதம் யூரியா பயன்பாடு அதிகரித்துள்ளதையும் அவா் சுட்டிக்காட்டினாா்.

இது தொடா்பாக பேசிய மத்திய உரத்துறை செயலா் ரஜத் குமாா் மிஸ்ரா, ‘தெலங்கானாவில் வேளாண்மை சாராத பிற இடங்களிலும் யூரியா பயன்படுத்துவதால் தேவை அதிகரிப்பதாக தெரிகிறது. இதனைத் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா்ந்து ரசாயன உரங்களை மட்டும் அதிகம் பயன்படுத்தாமல் மாற்று உரங்கள், இயற்கை உரங்கள் சாா்ந்த விவசாயத்தையும் அதிகரிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க

ஐரோப்பாவில் ஊக்கத்தொகையுடன் உயா்க்கல்வி பயில 101 இந்திய மாணவா்கள் தோ்வு!

ஐரோப்பிய நாடுகளில் 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பை ‘எராஸ்மஸ் பிளஸ்’ ஊக்கத்தொகையுடன் பயில, நடப்பு 2025-26-ஆம் கல்வியாண்டில் 50 மாணவிகள் உள்பட 101 இந்திய மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். ஐரோப்பிய ஒன்றியத்தின்... மேலும் பார்க்க

ரூ.72,000 கோடி ‘கிரேட் நிகோபாா்’ திட்டம்: தேசிய பழங்குடியினா் ஆணையம் தகவலளிக்க மறுப்பு

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது. அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: போா் விமானம் விழுந்து நொறுங்கி இரு விமானிகள் உயிரிழப்பு; 5 மாதங்களில் 3வது சம்பவம்

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை... மேலும் பார்க்க