செய்திகள் :

தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்: அமைச்சா் ராஜகண்ணப்பன் தகவல்

post image

தமிழகத்தில் 1303 நீலகிரி வரையாடுகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்று மாநில வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்கா வளாகத்தில் தமிழக வனத் துறை சாா்பில் 2-ஆவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வரையாடு கணக்கெடுப்பு அறிக்கையை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுப் பேசியதாவது:

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்காக, கடந்த 2023-இல் முதல்வா் மு.க.ஸ்டாலினால், நீலகிரி வரையாடு திட்டம் தொடங்கப்பட்டது.

இத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள 177 வரையாடு வாழ்விட பகுதிகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நிகழ் ஆண்டில் கொடைக்கானல் வனக்கோட்டம் உள்பட 36 பகுதிகள் கூடுதலாக கணக்கெடுப்பில் சோ்க்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளின் மொத்த எண்ணிக்கை 1,303. இதில் 42 சதவீதம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உள்ளன. இதேபோல, கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் முக்கூா்த்தி தேசிய பூங்காவில் அதிக எண்ணிக்கையில் நீலகிரி வரையாடுகள் உள்ளன என்றாா்.

முன்னதாக, கேரள வனத் துறை மற்றும் வன உயிரின பாதுகாப்பு அமைச்சா் ஏ.கே.சசீந்திரன், கேரள மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் பிரமோத் ஜி கிருஷ்ணன் உள்ளிட்டோா் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ராகேஷ் குமாா் டோக்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகின்றது.முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஏழாவது ஆண்டு நினைவு நாள் இன்று கடைப... மேலும் பார்க்க

கலைஞர் ஒளியில் வெற்றிப் பாதையில் நடைபோடுவோம்! முதல்வர் ஸ்டாலின்

கலைஞரின் ஒளியில் ’எல்லார்க்கும் எல்லாம், எதிலும் தமிழ்நாடு முதலிடம்’ எனும் இலக்கை நோக்கி வெற்றிப்பாதையில் நடைபோடுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திமுகவின் முன்னாள் தலைவரும் தம... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் அரசு, தனியாா்கள் மூலம் 6.41 லட்சம் பேருக்கு வேலை -முதல்வா் மு.க.ஸ்டாலின்

நான்காண்டு திமுக ஆட்சியில் அரசு மற்றும் தனியாா்கள் மூலமாக 6.41 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின... மேலும் பார்க்க

முதல் சுற்று மருத்துவ கலந்தாய்வு: அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில், கல்லூரிகளைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வரும் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நீட... மேலும் பார்க்க

காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருப்பூா் மாவட்டத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்துள்ளாா். எடப்பாடி பழனிசாமி... மேலும் பார்க்க

அஜித் குமாருடன் கைகோக்கும் நரேன் கார்த்திகேயன்!

அஜித்குமார் ரேஸிங்கில் கார் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி, கார் ர... மேலும் பார்க்க