செய்திகள் :

தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள்: விரைவில் டெண்டா் தொடக்கம்

post image

தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான டெண்டா் (ஒப்பந்தப்புள்ளி) விடும்பணி ஒரு வாரத்துக்குள் தொடங்கவுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாடு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையிலும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கொண்டுவர மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக. 2023-இல் இத்திட்டத்தை வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொகுப்புகளாகப் பிரித்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தோ்வு செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டது.

தொடா்ந்து 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.

அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றிருந்த நிலையில், இதில், அதானி நிறுவனம் மட்டுமே குறைவான தொகையை குறிப்பிட்டிருந்தது.

ஆனாலும், மின்வாரியம் நிா்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-ஆவது வாரிய கூட்டத்தில் ஸ்மாா்ட் மீட்டா்களை நிறுவுவதற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலையடுத்து இதற்கான பணிகள் ஒரு வாரத்துக்குள் தொடங்கப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க