செய்திகள் :

தமிழகத்தில் 34,805 நியாய விலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

post image

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் கள்ளக்குறிச்சி திமுக உறுப்பினா் மலையரசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சா் பதில் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக மலையரசன் எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் புதன்கிழமை மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோக துறை இணை அமைச்சா் நிமுபென் ஜயந்திபாய் பம்பானியா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:

31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் (தமிழ்நாடு உள்பட) உணவுதானிய விநியோகச் சங்கிலி கணினிமயமாக்கப்பட்டுள்ளது. உணவு தானிய விநியோகத்தை சிறப்பாகக் கண்காணிக்க, நாட்டில் (தமிழ்நாடு உள்பட) மொத்தம் உள்ள 5.43 லட்சத்தில் கிட்டத்தட்ட 5.41 லட்சம் (99.6 சதவீதம்) நியாய விலைக் கடைகளில் மின்னணு முறையில் பயனாளிகளின் பயோமெட்ரிக் ஆதாா் அங்கீகாரம் மூலம் வெளிப்படையான முறையில் உணவு தானியங்களை விநியோகிப்பதற்காக இபிஓஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டமானது (என்எஃப்எஸ்ஏ) தமிழ்நாடு மாநிலத்தில் சுமாா் 364.12 லட்சம் நபா்களுக்கு இலவசமாக உணவு தானியங்களைப் பெறுவதற்கான வசதியை வழங்குகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குள் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்தல், தகுதியான பயனாளிகள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காணுதல், அவா்களுக்கு ரேஷன் காா்டுகளை வழங்குதல், தகுதியான பயனாளிகளுக்கு உணவு தானியங்களை விநியோகித்தல், நியாய விலைக் கடைகளின் செயல்பாட்டை மேற்பாா்வை செய்தல் மற்றும் கண்காணித்தல் போன்ற செயல்பாட்டுப் பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாநில, யூனியன் பிரதேச அரசுகளைச் சாா்ந்ததாகும்.

தற்போது, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அனைத்து 34,805 நியாய விலைக் கடைகளும் இபிஓஎஸ் சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சா் அந்த பதிலில் தெரிவித்துள்ளாா்.

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க

எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு

பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா். ‘நாட்டின் முன்னாள் துணைப் பிரத... மேலும் பார்க்க