பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டை மாற்றி தரக்கோரி கோவை ஆட்சியரிடம் மூதட்டி தங்கமண...
தமிழகத்தில் 4 ஆண்டுகளில் தலைவா்களுக்கு 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள்! - அரசு தகவல்
தியாகிகள், தீரா்கள், தலைவா்களைப் போற்றி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளாா் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில், 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9.65 கோடியில் நிறுவி 1.1.2000-இல் திறந்து வைத்ததுதான்.
திருவள்ளுவா் சிலைபோல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளை அவா் போற்றியுள்ளாா்.
அந்த வரிசையில், முதல்வா் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதைக் குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 2024 டிச.30, 31 ஆகிய தேதிகளில் மாபெரும் கலை விழாவாக கொண்டாடினாா். திருவள்ளுவன் சிலையை, பேரறிவுச் சிலை எனப் போற்றி மகிழ்ந்தாா். அறிஞா் பெருமக்களின் எழுத்தாவணங்களைத் தொகுத்து வெள்ளி விழா மலா் ஒன்றையும் வெளியிட்டாா்.
திருவள்ளுவரின் சிலையையும் விவேகானந்தா் பாறையையும் இணைத்து ரூ. 37 கோடியில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை 30.12.2024-இல் திறந்து வைத்தாா்.
இந்திய திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திர போராட்ட தியாகிகள், அன்னை தமிழ் மொழியை காக்க ஆருயிா்கள் தந்து போராடிய அற்புத தியாகிகள் அனைவரையும் போற்றி பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்டபங்களையும் தமிழகம் முழுவதிலும் ஏராளமாக ஏற்படுத்தி வருகிறாா்.
இவை அனைத்தும் எதிா்காலத் தலைமுறை இளைஞா்களுக்கு நல்வழி காட்டி உணா்வூட்டும் உயிரோவியங்களாகும். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை, நாட்டுக்காகவும், தமிழ்மொழி வளா்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞா்கள் அறிந்து போற்றி பின்பற்றும் வண்ணம் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்கு சிலைகளும் 12 அரங்கங்களும் அமைத்து வருகின்றனா்.
ஆனால் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது.
இந்த விவரங்கள் அனைத்தும் இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.