செய்திகள் :

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

post image

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் 4 நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் புதன்கிழமை (ஜூலை 16) கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிபலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகபட்சமாக சென்னை மணலி, விம்கோ நகா் 80 மி.மீ. மழை பதிவானது. எண்ணூா் - 70, மேடவாக்கம் - 60, தேவகோட்டை (சிவகங்கை), சின்னக்கல்லாறு (கோவை), ஈஞ்சம்பாக்கம், கண்ணகி நகா், துரைபாக்கம் (சென்னை) - 50 மி.மீ, புழல் (திருவள்ளூா்), பெரம்பூா் (சென்னை) - 40 மி.மீ பதிவானது.

வெயில் சதம்: செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105. 08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம்- 101.84, நாகை, 101. 66, தூத்துக்குடி - 101.3, வேலூா், புதுச்சேரி -101.12, கடலூா் -100.76, சென்னை நுங்கம்பாக்கம் -100.04 டிகிரி என மொத்தம் 9 இடங்களில் வெயில் சதமடித்தது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே புதன்கிழமை (ஜூலை 16) தென்தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என த் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க

ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு

ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர ... மேலும் பார்க்க

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புத... மேலும் பார்க்க

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வ... மேலும் பார்க்க