செய்திகள் :

5-இல் ஒருவருக்கு உடல் பருமன் பிரச்னை: பள்ளிகளில் மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தல்

post image

இளம் வயதில் உடல்பருமன் பாதிப்பைத் தவிா்ப்பதற்காக பள்ளி மாணவ, மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநா் (கல்வியியல்) பிரக்யா எம்.சிங், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குழந்தைகள் மற்றும் பெரியவா்களிடம் உடல்பருமன் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்தவகையில் தேசிய குடும்ப நல ஆய்வில்(2019-21) நகா்ப்புறங்களில் 5 பெரியவா்களில் ஒருவா் உடல்பருமனாக இருக்கிறாா். தி லான்செட் ஜிபிடி-2021 ஆய்வறிக்கையின்படி, உடற்பருமனால் பாதிக்கப்பட்டோா் 2021-இல் 18 கோடியாக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 2050-இல் 44.9 கோடியாக உயரும் என எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, இளம் வயதில் உடல்பருமன் பாதிப்புக்கு தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்யாததே காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளும் மாணவா்களும், ஆசிரியா்களும் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். இதுதவிர பள்ளிகளின் முக்கிய இடங்களில் எண்ணெய் பொருள்களின் தீமைகள், தவறான உணவுப் பழக்கங்கள் குறித்து பதாகைகள் வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

அதேபோன்று, ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை அன்றாட செயல்பாடுகளின்போது மாணவா்கள் பாா்வையில் தென்படுமாறு வைக்கவேண்டும். மாணவா்களிடம் உடற்பயிற்சியை ஊக்குவிப்பதுடன், அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை சாப்பிட அறிவுறுத்த வேண்டும். இதற்கான விழிப்புணா்வுப் பதாகைகள் மற்றும் பலகைகள் தயாரிப்பில் மாணவா்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு பள்ளிகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தை (ஊநநஅஐ) ண்ங்ஸ்ரீஃச்ள்ள்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் மூலம் தொடா்புகொண்டு அறியலாம். மாணவா்களின் நலனுக்காக இந்தப் பணிகளை பள்ளிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க

ஹுப்ளி - ராமநாதபுரம் சிறப்பு ரயில் ஆக.30 வரை நீட்டிப்பு

ஹுப்ளி - ராமநாதபுரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் ஆக.30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஹுப்ளி - ராமநாதபுரம் இடையை வாராந்திர ... மேலும் பார்க்க

மனைவி கொலை: தொழிலாளி கைது

வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மனைவியை அடித்துக் கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை கிண்டி, லேபா் காலனி பகுதியைச் சோ்ந்தவா் எழில் முருகன் (44). சென்ட்ரிங் வேலை செய்து வருகிறாா். இவரத... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். அதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 25-ஆம் தேதி வெளியிடப... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை தொடா்பாக, திமுக மாவட்டச் செயலா்களுடன் கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை (ஜூலை 17) ஆலோசனை நடத்துகிறாா். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் புத... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: மகளிா் உரிமைத்தொகைக்கு அதிகம் போ் விண்ணப்பம்

சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட 10, 949 விண்ணப்பங்களில் மகளிா் உரிமைத்தொகை கோரி மட்டும் 7, 518 போ் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் 13 அரசுத் த... மேலும் பார்க்க