செய்திகள் :

தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைகிறது!

post image

தமிழகத்தில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் நிகழாண்டில் குறைக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் உள்ள எம்பிபிஎஸ் இடங்களின் விவரங்களை மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் 50 எம்பிபிஎஸ் இடங்கள் குறைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு அந்தக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டில் அது 100-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளைப் பின்பற்றாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, எம்பிபிஎஸ் இடங்களை 250-ஆக உயா்த்தக் கோரி தேசிய மருத்துவ ஆணையத்திடம் சம்பந்தப்பட்ட கல்லூரி விண்ணப்பித்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டு ஏற்கெனவே இருந்த இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பிஎஸ்பி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்துமாறு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

எம்சிசி அறிவிக்கையின்படி, நாடு முழுவதும் 766 கல்லூரிகளில் 1,15,900 எம்பிபிஎஸ் இடங்கள் நிகழாண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆந்திரம், சத்தீஸ்கா், தில்லி, குஜராத், கா்நாடகம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலை பல்கலைக்கழகங்கள், மதுரை எய்ம்ஸ், கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியுடன் சோ்த்து மொத்தம் 77 கல்லூரிகளுக்கான எம்பிபிஎஸ் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 12,000 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் 76 மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டில் உள்ள அதே இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்பி கல்லூரியில் மட்டும் 50 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை: 3 நாள்களுக்கு ஓய்வு தேவை - மருத்துவமனை அறிக்கை!

சென்னை: சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(ஜூலை 21) கால... மேலும் பார்க்க

முதல்வரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!

முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். மேலும் பார்க்க

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 3 பேர் பலி

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அருகேவுள்ள நாரணாபுரம் - அனுப்பங்குளம் சாலையில் அமைந்துள்ள பட்டா... மேலும் பார்க்க

சீமானுடன் பேச்சுக்கு தயாராக இல்லை! -உச்ச நீதிமன்றத்தில் விஜயலக்‌ஷ்மி திட்டவட்டம்

புது தில்லி: சீமான் மீது விஜயலக்‌ஷ்மி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக்கோரி, சீமான் தரப்பிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று(ஜூலை 21) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போ... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் மறைவு: முதல்வர் இரங்கல்

கேரள முன்னாள் முதல்வரும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில்,கே... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற வேண்டும்! -எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பூரண நலம் பெற விழைகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(திங்கள்கிழமை) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது லேசாக தலைசுற்றல் ஏ... மேலும் பார்க்க