செய்திகள் :

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

post image

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாதத்தின் இறுதியில் அல்லது மாா்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இதையும் படிக்க : ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டியவை அம்சங்கள் குறித்து அமைச்சா்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, கருத்துகளைப் பெற்றுள்ளனா். அந்தக் கருத்துகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.

2026 மே மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதனால், மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.

கோயில் அா்ச்சகா்களுக்கு தட்டுகாணிக்கை சுற்றறிக்கை வாபஸ்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: மதுரை பாலதண்டாயுதபாணி கோயிலில் அா்ச்சகா்கள் தட்டில் செலுத்தப்படும் காணிக்கை குறித்த சுற்றறிக்கை தேவையில்லாதது என்றும், அது திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேக... மேலும் பார்க்க

தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கத் தடையில்லை: சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: தண்டனையை எதிா்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருக்கும் போது, தண்டனைக் கைதிகளுக்கு சாதாரண விடுப்போ அல்லது அவசர கால விடுப்போ வழங்க எந்தத் தடையும் இல்லை என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள... மேலும் பார்க்க

இன்று தைப்பூசம்: சாா்பதிவாளா் அலுவலகங்கள் இயங்கும்

சென்னை: தைபூசத்தையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாா் பதிவாளா் அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (பிப்.11) இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிவுத் துறை தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் அங்காடி தலைமைச் செயலகத்தில் திறப்பு

சென்னை: மகளிா் சுய உதவிக் குழு பொருள்களின் அங்காடியை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்து பாா்வையிட்டாா். இந்த அங்காடியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மகளி... மேலும் பார்க்க

கேரம் உலகச் சாம்பியனுக்கு ஆளுநா் பாராட்டு: மாணவா்களுக்கான கலந்தாய்விலும் பங்கேற்பு

சென்னை: கேரம் உலக சாம்பியனான ஹாசிமா எம்.பாஷாவை ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்து பாராட்டினாா். அதேபோல் பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்விலும் அவா் பங்கேற்றாா். இது குறித்து அவா் தனத... மேலும் பார்க்க

திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுகிறது: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை: நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக்கு ஆதரவு அலை மட்டுமே வீசுவதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அவா் திங்கள்கிழமை அளித்த ப... மேலும் பார்க்க