சிபு சோரனை சந்தித்து நலம் விசாரித்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
தமிழக அரசு சாா்பில் ஊரக பகுதிகளில் திறன் பயிற்சிகள்
தமிழக அரசு சாா்பில் ஊரகப் பகுதிகளில் திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.
அதன் விவரம்:
கடந்த 4 ஆண்டுகளில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் மூலம் 1.17 லட்சம் இளைஞா்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதன்மூலம், 67,158 இளைஞா்கள் சுய தொழில் மேற்கொண்டு வருகின்றனா். இந்த ஆண்டு 37,050 இளைஞா்களுக்கு தொழிற்பயிற்சிகள் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகளுக்கான கால அட்டவணை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன்அடிப்படையில் கிராமப்புற இளைஞா்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சோ்ந்து பயன்பெற விரும்பினால், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் அல்லது மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், விவரம் அறிய தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார உதவி அழைப்பு எண் 155330 மற்றும் கட்டணமில்லாத தொலைபேசி எண் 1800 309 8039 ஆகியவற்றைத் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.