செய்திகள் :

தமிழக பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் போட்டி!

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் புதுவை முதல்வருமான ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆம் ஆண்டு விழாவில் வெள்ளிக்கிழமை பேசிய ரங்கசாமி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்திலும் என்.ஆர். காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்தார்.

மேலும், யாருடன் கூட்டணி என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் துன்புறுத்தல்! நடந்தது என்ன?

காங்கிரஸில் இருந்து விலகிய ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் என்ற கட்சியை 2011ஆம் ஆண்டில் தொடங்கினார். அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று முதல்வரானார்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 2021 -ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்.

தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல்வராக உள்ளார்.

மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஈபிஎஸ் கண்டனம்

மணப்பாறையில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், திருச்சி மாவட்டம் மணப... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழ... மேலும் பார்க்க

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி, ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான்: பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்!

வேலூர்: ரயிலில், மகளிர் பெட்டியில் யாரும் இல்லாததை அறிந்துகொண்டு என்னிடம் அத்துமீறிய ஹேமராஜ், என் கையை உடைத்து ரயிலிலிருந்து தள்ளிவிட்டான் என்று ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட கர்ப்பி... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்ப... மேலும் பார்க்க

கோவையில் அரை மணி நேரம் வானில் வட்டமடித்த விமானம்!

கடும் பனி மூட்டம் காரணமாக கோவையில் தரையிறங்க முடியாமல் விமானம் ஒன்று சுமார் அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது. கோவையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் விமான சேவையில் அ... மேலும் பார்க்க