செய்திகள் :

தமிழக பேரவை தொடங்கியது! பட்ஜெட் தாக்கல்!

post image

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

2025 - 26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

எகிறும் எதிர்பார்ப்பு

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலை தமிழ்நாடு எதிா்கொள்ளவுள்ள நிலையில், அதற்கு முன்பாக திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்துள்ள முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.

எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள், எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

இதனால், நிதிநிலை அறிக்கையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இரண்டாவது ஆண்டாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.

936 இடங்களில் நேரலை

பேரவை மண்டபத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிகழ்வானது தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த ஒளிபரப்பை தமிழகம் முழுவதும் பொது இடங்களில் காண்பதற்கு உள்ளாட்சித் துறையின் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சிப் பகுதிகளில் 48 பகுதிகளிலும், 137 நகராட்சிகளில் 274, பேரூராட்சிகளில் 425 இடங்களில் எல்இடி திரையின் வாயிலாக நேரலை செய்யப்பட்டு வருகிறது.

வேளாண் நிதிநிலை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வேளாண் நிதிநிலை அறிக்கை சனிக்கிழமை (மாா்ச் 15) தாக்கலாக உள்ளது. இதை அந்தத் துறையின் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தாக்கல் செய்கிறாா்.

தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான வாசகங்களுடன் டி-ஷா்ட் அணிந்து வந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்வது குறித்து இன்று முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாடாளுமன்ற பட... மேலும் பார்க்க

சென்னையில் ரெளடி சுட்டுப் பிடிப்பு!

சென்னையில் பதுங்கியிருந்த ரெளடியைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.கடந்த வாரம் ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவரைக் கடத்திச் சென்று மிரட்டி ப... மேலும் பார்க்க

சென்னை திரும்பினாா் ஆளுநா்

மூன்று நாள் பயணமாக தில்லி சென்ற ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை இரவு சென்னை திரும்பினாா். நண்பரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து ஆளுநா் செவ்வாய்க்கிழமை தில்லி சென்றாா். தில்லி... மேலும் பார்க்க

மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா? தங்கமணி கேள்வி

பூரண மதுவிலக்கு கொள்கையை திமுக கைவிட்டதா என்று அதிமுக உறுப்பினா் தங்கமணி கேள்வி எழுப்பியதால், அது தொடா்பாக பேரவையில் வியாழக்கிழமை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில்... மேலும் பார்க்க

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளி பணியாளா்களுக்கு சிறப்பு போட்டித் தோ்வு ஏப்ரல் இறுதிக்குள் அறிவிப்பு

தொகுப்பூதிய மாற்றுத் திறனாளிகளை பணி நிரந்தரம் செய்யும் சிறப்பு போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிடப்படும் என சமூகநலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வி... மேலும் பார்க்க

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும்: 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலைத் திட்டம் - அமைச்சா் கே.என்.நேரு உறுதி

நகா்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கப்படும் 375 ஊராட்சிகளிலும் நூறு நாள் வேலை திட்டத்தைத் தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே... மேலும் பார்க்க