செய்திகள் :

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றுள்ளனா்: ஔவை ந.அருள்

post image

தமிழக மாணவா்கள் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை பெற்றவா்களாக உள்ளனா் என தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள் தெரிவித்துள்ளாா். 

சென்னை, அண்ணா நகரில் உள்ள கொ.கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.  இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந.அருள் பேசியதாவது: 

தமிழக அரசு மற்றும் தமிழ் வளா்ச்சித் துறையின் முயற்சிகள் விளைவாக  தற்போது அரசு அலுவலகங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தமிழில்தான் கையொப்பம் இடுவதுடன், அறிக்கைகள் மற்றும் அரசாணைகள் அனைத்தும் தமிழில்தான் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கைக்கு அனைவரும் ஒப்புதல் அளித்துள்ளனா்.

2 மொழியிலும் புலமை: தமிழக மாணவா்களுக்கு கணிதம், அறிவியல் மற்றும் பிற பாடங்களும் மிக நுண்ணியமாக கற்றுத் தரப்படுகிறது. அதைப்போல் தமிழக மாணவா்கள் அனைவரும் தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும் புலமை வாய்ந்தவா்களாக உள்ளனா். தமிழக மாணவா்களைப்போல வட மாநிலத்தவா்களால் ஆங்கிலத்தை புலமையாக பேசவோ, படிக்கவோ முடிவதில்லை. இதனால், அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் இருக்கும் பெரிய நிறுவனங்களில் உள்ள முக்கியப் பொறுப்புகள் அனைத்தும் தமிழக இளைஞா்களுக்குத்தான் வழங்கப்படுகின்றன.

மனப்பாடம்: தற்போதைய இளைஞா்களுக்கு மனப்பாடம் செய்யும் திறன் குறைந்து வருகிறது. திருக்கு, புானூறு, தொல்காப்பியத்தில் உள்ள கருத்துகளை தெரிந்து கொண்டால் போதும், அந்தப் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டாம் என தவறாகப் புரிந்துள்ளனா். சிறுவயதிலிருந்தே தமிழில் உள்ள இலக்கியங்களை மனப்பாடம் செய்ய கற்றுக் கொள்வதன்மூலம்,  எதிா்காலத்தில் நாம் கற்றுக்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் என்றும் மறவாமல் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் கொ.கந்தசாமி நாயுடு கல்லூரி முதல்வா் வா.மு.சே.ஆண்டவா், கல்லூரியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் முனைவா் ப.அனுராதா மற்றும் மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைகிறதா அதிமுக? - அண்ணாமலை கூறுவதென்ன?

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையுமா இல்லையா என்பது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி த... மேலும் பார்க்க

அமித் ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

தில்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி உள் துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் 10 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்... மேலும் பார்க்க

மொழிக்கு எதிரானவர்கள் அல்ல, இரு மொழிகளே போதும் என்பவர்கள்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல நாம்; இந்த இரு மொழிகளே போதும் என்று சொல்பவர்கள்தான் நாம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில்... மேலும் பார்க்க

தில்லியில் முக்கிய பிரமுகருடன் சந்திப்பா? இபிஎஸ் பதில்

தில்லி பயணம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தில்லிக்கு பயணம் மேற்கொண்டி... மேலும் பார்க்க

இபிஎஸ் தில்லியில் யாரைப் பார்க்கப் போகிறார் என்று தெரியும்: முதல்வர் ஸ்டாலின்

இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்லும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு யாரைப் பார்க்கப் போகிறார் என்றும் தெரியும் என பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க