செய்திகள் :

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல் 180 போ் கைது

post image

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 180 போ் கைது செய்யப்பட்டனா்.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்கள், காசநோய் தடுப்புத் திட்ட ஊழியா்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், புற ஆதார ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொ. சின்னப்பொன்னு தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் ஜெ. லட்சுமிநாராயணன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் சு. மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க