அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் மறியல் 180 போ் கைது
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 180 போ் கைது செய்யப்பட்டனா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்ட ஊழியா்கள், காசநோய் தடுப்புத் திட்ட ஊழியா்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், புற ஆதார ஊழியா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொ. சின்னப்பொன்னு தலைமை வகித்தாா். சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலா் ஜெ. லட்சுமிநாராயணன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மாவட்டச் செயலா் சு. மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் கே. முனியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.