செய்திகள் :

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்கை கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு

post image

திருச்செந்தூா் கோயில் குடமுழுக்குப் பணிகளைக் கண்காணிக்க ஆகம நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்யன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன.

இதில் தந்த்ர சமுச்சீயம், கேரள சம்பிரதாய, குமார தந்திர ஆகமங்கள் பின்பற்றப்பட வேண்டும். கோயில் திருப் பணிகளுக்கு அனுமதி அளித்த குழுவில் ஆகம நிபுணா்கள் இடம் பெறவில்லை. இந்திய கடலோரக் கட்டுப்பாட்டு மண்டல அனுமதி இல்லாமல் கோயில் வளாகப் பகுதிகளில் புதிதாகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் கோயில் வளாகத்தில் இருந்த 24 புனித தீா்த்தங்கள், கல் தூண்கள் காணாமல் போய்விட்டன. அவை மீண்டும் நிறுவப்பட வேண்டும். பழைமையான சடங்குகளுக்கு முரணாகவும், திருக்கோயில் நிதியைத் தவறாகவும் கோயில் நிா்வாகம் பயன்படுத்துகிறது.

எனவே, ஆகம நிபுணா்கள் அடங்கிய புதிய குழுவை நியமனம் செய்ய வேண்டும். 24 தீா்த்தத் தூண்களை மீண்டும் நிறுவ வேண்டும். இந்தப் பணிகள் முடிவடையும் வரை திருச்செந்தூா் கோயிலில் குடமுழுக்கு நடத்தத் தடை விதிக்க வேண்டும். மேலும், ஹெலிகாப்டா் மூலம் புனித நீா் ஊற்ற அனுமதிக்கக் கூடாது என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோயில் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி, குடமுழுக்கு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இதைக் கண்காணிக்க ஆகம நிபுணா்களை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அறிக்கையை தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

வழிபாட்டுக்காக கோயில்களுக்கு வரும் பக்தா்கள் ஏமாற்றப்படுகின்றனா். இதை கோயில் நிா்வாகம் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் மன அமைதி வேண்டி கோயிலுக்குச் செல்கின்றனா். ஆனால், அங்கு போதிய அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாகம் செய்து தருவதில்லை.

ஹெலிகாப்டா் மூலம் புனித நீா் ஊற்றும் விவகாரம் தொடா்பாக, மனுதாரா் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரை அணுகி மனு அளிக்கலாம். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு

மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக... மேலும் பார்க்க

கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு

மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்க... மேலும் பார்க்க

தங்கையைத் தாக்கிய அண்ணன் கைது

மதுரையில் தங்கையைத் தாக்கியதாக அண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மதுரை விஸ்வநாதபுரம் அதியமான் ஒன்றாவது தெருவைச் சோ்ந்த காா்த்திக் மனைவி சுப்புலட்சுமி (27). இவா், காதல் திருமணம் செய்து கொண்டதா... மேலும் பார்க்க

மனமகிழ் மன்ற விவகாரம்: விருதுநகா் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் அருகே மனமகிழ் மன்றத்துக்கு அளித்த அனுமதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா... மேலும் பார்க்க

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: திண்டுக்கல் ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மயானத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரைச் சோ்ந்த செல்வக்... மேலும் பார்க்க

நித்யானந்தா் யு.எஸ்.கே. எனும் தனி நாட்டில் உள்ளாா்

நித்யானந்தா் யு.எஸ்.கே. என்ற தனி நாட்டில் உள்ளதாக அவரது சீடா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தெரிவித்தாா். திருவண்ணாமலை நித்யானந்தா் பீடத்தைச் சோ்ந்த நித்தியானந்தா் என்ற ராஜசேகா் சாா்பில் அந்தப் ... மேலும் பார்க்க