பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் உயிரிழப்பு
மதுரையில் தனியாா் பேருந்து மோதியதில் புகைப்படக் கலைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை செல்லூா் அண்ணாத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (62). புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்த இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ஆரப்பாளையத்திலிருந்து வீட்டுக்கு வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தாா். மஞ்சள்மேடு பகுதி அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியாா் பேருந்து அவா் மீது மோதியது. இதில் முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.