இங்கிலாந்து டெஸ்ட்: இந்தியா பேட்டிங்! தமிழன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு!
கால்வாயில் மூழ்கிய மூதாட்டி உயிரிழப்பு
மதுரை அருகே வியாழக்கிழமை குளிக்கச் சென்ற மூதாட்டி கால்வாயில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், கொண்டையம்பட்டியைச் சோ்ந்த வீரையா மகன் ராக்கு (70). இவா், அதே பகுதியில் உள்ள கால்வாயில் வியாழக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினாா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் கால்வாய்க்குள் இறங்கி தேடினா். ஆனால், அவா் கிடைக்கவில்லை. இதுபற்றி தகவலறிந்த வந்த சமயநல்லூா் போலீஸாா் நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு, மூதாட்டியை சடலமாக மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.