செய்திகள் :

தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

தமிழ்நாடு ஒருபோதும் தலைவணங்காது என தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தற்போது மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்பினால் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தென் மாநில முதல்வர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் உலக மக்கள்தொகை நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"உலக மக்கள்தொகை நாளில் மத்திய அரசுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன்.

-> மக்கள்தொகை கட்டுப்பாட்டில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது.

-> பெண்களுக்கு கண்ணியத்துடன் அதிகாரம் அளிக்கிறது.

-> அனைவருக்கும் சுகாதாரம், கல்வியை அளிக்கிறது.

-> நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

ஆனால் நமக்கு கிடைப்பது என்ன?

குறைவான இடங்கள், குறைவான நிதி, நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படும் குரல். (தொகுதி மறுசீரமைப்பினால் தமிழக எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைவது)

ஏன்? ஏனென்றால் தமிழ்நாடு சரியானவற்றைச் செய்தது. ஆனால் அது தில்லியை அச்சுறுத்துகிறது.

அதைவிட இன்னும் மோசம் என்னவென்றால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அவரது கட்சியும் இப்போது தமிழ்நாட்டுடன் அல்ல, தில்லியுடன் நிற்கிறார்கள். நமது முன்னேற்றத்தைத் தடுக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு ஆதரவைத் தெரிவிக்கிறார்கள்.

ஆனால், நான் தெளிவாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு தலைவணங்காது.

நாம் ஒன்றாக இணைந்து எழுவோம். இது ஓரணி vs தில்லி அணி.

நம்முடைய மண், மொழி, மானத்தைக் காக்க 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் இணையுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

TN Chief minister MK stalin said that Tamil Nadu will not bow to union govt on fair delimitation

பாஜகவின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

தமிழக பள்ளிகளிலும் இனி கடைசி பெஞ்ச் கிடையாது!

கேரளத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களின் 'ப' வடிவில் உட்கார வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்துப் பள்ளிகளுக்கும் மாவட்ட கல்வி அ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

அதிமுக - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி... மேலும் பார்க்க

நவீன் மரணம் தற்கொலை போன்றே உள்ளது: காவல் ஆணையர் அருண்

சென்னை: தனியார் பால் நிறுவன மேலாளர் நவீன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கும் நிலையில், அது தற்கொலை போன்றே உள்ளது என்று காவல் ஆணையர் அருண் விளக்கம் கொடுத்திருக்கிறார்.சென்னையை அடுத்த புழல் ப... மேலும் பார்க்க

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு: எல். முருகன்

கூட்டணி விவகாரத்தில் அமித் ஷா சொல்வதே இறுதி முடிவு என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்த... மேலும் பார்க்க

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!

கூட்டணி ஆட்சி என மத்திய அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 'தி நியூ இந்தியன் எ... மேலும் பார்க்க

பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை: தவெக திட்டவட்டம்

தவெகவுடன் கூட்டணிக்கு முயற்சிப்போம் என அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில், பாஜகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என தவெக தலைமை கூறியுள்ளது. 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், தவெக... மேலும் பார்க்க