தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் சாம்பியன் போட்டி: நாளை சென்னையில் தொடக்கம்
தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மாநில ஆடவா், மகளிா் சீனியா் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூன் 30 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக சென்னை மாவட்ட சங்க தலைவா் அா்ஜுன் துரை, செயலா் ஸ்ரீ கேசவன் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:
கௌரவமிக்க தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் போட்டிகள் சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்குகளில் நடைபெறவுள்ளன.
மாநிலம் முழுவதும் இருந்து தகுதி பெற்ற 24 ஆடவா் அணிகள், மகளிா் பிரிவில் 38 அணிகள் பங்கேற்கின்றன. கிளப்புகள், கல்வி நிலையங்கள், பல்வேறு துறைகளின் அணிகள் இடம் பெறுகின்றன.
லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில் 900 வீரா், வீராங்கனைகள் பங்கேற்கின்றனா். வீரா்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் வழங்கப்படுகிறது.
ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது.
சாம்பியன் அணிகளுக்கு எஸ்என்ஜே கோப்பையும், ஆடவா் ரன்னருக்கு டிவோஸா, மகளிா் ரன்னருக்கு ரேடியன்ஸ் ரியால்டி கோப்பைகளும், மூன்றாம் இட அணிக்கு ஜாஸ், காவேரி டிஎம்டி கோப்பைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, நடிகா் பிரசாந்த், மாநில வாலிபால் சங்கத் தலைவா் ஜெயமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.