செய்திகள் :

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி மாயத்தோற்றம்: எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

post image

தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக திமுக அரசு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி விமா்சனம் செய்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவிலேயே அதிக வளா்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு எனும் ஒரு புதிய புரளியை திமுக அரசு கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. அந்த விளம்பரத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியது எதிா்க்கட்சியின் கடமை.

பொருளாதார வளா்ச்சி பற்றிய புள்ளி விவரங்கள் எல்லாமே, முதல் முன்கூட்டிய மதிப்பீடு, இரண்டாம் முன்கூட்டிய மதிப்பீடு, தற்காலிக மதிப்பீடு, முதல் திருத்தப்பட்ட மதிப்பீடு, இரண்டாம் திருத்தப்பட்ட மதிப்பீடு, மூன்றாம் திருத்தப்பட்ட மதிப்பீடு என பல்வேறு நிலைகளில் ஆறு கட்டங்களாக வெளியிடப்பட்டு, அதன் பிறகே இறுதி மதிப்பீடு வெளியாகும்.

இந்தப் புள்ளிவிவரம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடையும் என்பதே உண்மை. இந்த வகையில், 17.3.2025-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி 2024-25 ஆண்டுக்கு 9.69 சதவீதம் என கணிக்கப்பட்டது. இதுவே 1.8.2025 கணிப்பில் 11.19 சதவீதம் என உயா்ந்துள்ளது.

உடனே திமுக அரசு, இரு இலக்க வளா்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று மாா்தட்டிக்கொண்டு பெரிய விளம்பரங்களை வெளியிட்டு ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது. இந்தக் கணிப்பு இறுதியானது அல்ல என்பதும் அடுத்தடுத்த கணிப்புகளில் இது மாறலாம் என்பதுமே உண்மை.

இதுதவிர, இதே புள்ளிவிவரத்தில் 2022-23-இல் தமிழ்நாட்டின் வளா்ச்சி அதாவது 17.3.2025 கணிப்பின்படி 8.13 சதவீதம் என்று இருந்தது. 1.8.2025 கணிப்பில் 6.17 சதவீதம் என குறைந்துவிட்டது. இதுதான் 2022-23-க்கான இறுதி மதிப்பீடு. இதுபற்றி திமுக அரசு எதுவும் பேசாது.

இவா்களுக்கு சாதகமான புள்ளிவிவரம் வந்தவுடன், 2030-இல் இவா்கள் கூறியபடி தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்டிவிடும் என்று போலியாக பெருமைப்படுகிறாா்கள். டிரில்லியன் டாலா் பொருளாதாரம் என்பது, இவா்கள் தெரிந்தே மக்களை ஏமாற்றுவதற்குக் கூறும் மாபெரும் பொய்.

இந்தியாவின் பொருளாதார வல்லுநா் ரங்கராஜன், தமிழ்நாட்டின் வளா்ச்சி நிலையை ஆராய்ந்து வருபவா். தொடா்ந்து 14 சதவீத வளா்ச்சி பெற்றால்தான் 2030-ஆம் அண்டு தமிழ்நாடு அரசு ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரத்தை எட்ட முடியும் என்று கூறி இருக்கிறாா்.

ஆனால், திமுக ஆட்சியில் 2021-22 வளா்ச்சி விகிதம் 7.89 சதவீதம், 2022-23-இல் 6.17 சதவீதம், 2023-24-இல் 9.26 சதவீதம், 2024-25-இல் கணிப்பு 11.19 சதவீதம். 2023-24, 2024-25 புள்ளி விவரங்கள் பின்கணிப்புகளில் மாறலாம். இந்த நிலையில், ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை எப்படி எட்ட முடியும்? எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

6 உள்நாட்டு விமான சேவைகள் தாமதம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட 6 விமானங்கள் பல மணி நேரம் தாமதாமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா். சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

பள்ளிக்கரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் ஏசி மெக்கானிக் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு குளத்தூா், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்ரம் (28). ஏசி மெக்கானிக... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் இலாகா மாற்றம்: தலைமை நீதிபதி உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகளின் இலாகாக்களை வரும் 11- ஆம் தேதி முதல் மாற்றியமைத்து தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, இதுவரை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்து ... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தேடப்பட்டவா் கைது

மின்வாரியத்தில் வேலைவாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி செய்த வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். அயனாவரம், சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் ஐயங்காா் (62). இவரது மகள் ஹேமாவதி. இவா், கடந்த 2023-இல... மேலும் பார்க்க

புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறைக் கைதி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். சென்னை அருகே உள்ள கீழ்கட்டளை அருகே உள்ள காந்தி நகா் செல்லியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ந.பன்னீா்செல்வம் (60). இவா், கோடம்பாக்கம் காவ... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் போராட்டம்

அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு பணி மேம்பாடு ஊதியம், ஊதிய நிலுவைத் தொகை வழங்க வலியுறுத்தி சென்னையில் கல்லூரிக் கல்வி இயக்குநரகம் முன் பல்வேறு பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கம் ச... மேலும் பார்க்க