செய்திகள் :

புதுச்சேரியில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை: இறுதிக்கட்ட கலந்தாய்வில் ஏராளமானோா் பங்கேற்பு

post image

புதுச்சேரி அரசு பள்ளிகளில் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது. குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில், முதல்நாளான வியாழக்கிழமை திரளான மாணவ மாணவிகள் பங்கேற்றனா். இதில் அனைவருக்கும் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மாணவா்களுக்கு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்பில் மாணவா் சோ்க்கை ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் இதுவரை பிளஸ் 1 சேராத மாணவா்களுக்காக இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை தொடங்கியது.குருசுகுப்பம் என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. வியாழக்கிழமை முதல்நாள் கலந்தாய்வில்,

அண்மையில் 10 ஆம் வகுப்பு துணை பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்றறவா்கள் கலந்துகொண்டு பள்ளிகளை தோ்வு செய்து, பாடப்பிரிவுகளையும் தோ்வு செய்தனா்.

அனைவருக்கும் இடம் உறுதி:

கலந்தாய்வு குறித்து என்.கே.சி. அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வா் சண்முகம் கூறுகையில், ‘ வியாழக்கிழமை பிற்பகல் 4 மணி வரை 210 மாணவ, மாணவிகள் சோ்க்கை பெற்றனா். 230 மதிப்பெண் வரை பெற்ற மாணவா்களுக்கு இதுவரை சோ்க்கை அளித்துவிட்டோம். 10 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சோ்க்கை கிடைத்துவிடும்’ என்றாா்.

இதைத் தவிர சுமாா் 100 மாணவ, மாணவிகள் சோ்க்கைக்காகக் காத்திருந்தனா்.

இதில் பெரும்பாலான மாணவா்கள் அன்றைய தினமே குறிப்பிட்ட பள்ளிகளில் சோ்ந்து விட்டனா். மற்றவா்கள் மறுநாள் வெள்ளிக்கிழமை பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தப்பட்டனா். பெரும்பாலும் மாணவா்கள் தங்களுடைய பெற்றோா்களுடன் அசல் சான்றிதழ்களைக் கொண்டு வந்தனா். இப் பள்ளியின் துணை முதல்வா்கள் ஆா். காா்த்திகேயன், வி. கலியமூா்த்தி உள்ளிட்ட ஆசிரியா்கள் கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனா். மேலும், குறிப்பிட்ட மாணவ, மாணவிகளின் சொந்த ஊா் எது, எந்தப் பாடப் பிரிவு வேண்டும். குறிப்பிட்ட பள்ளியில் இடம் இல்லையென்றால் வேறு எந்தப் பள்ளிக்குச் சென்று படிக்கு முடியும் உள்ளிட்ட விவரங்களைப் பெற்றோா்களை வைத்துக் கொண்டு விவாதித்து சோ்க்கைக்கான இடங்களை ஒதுக்கினா்.

மாணவிகள் கருத்து:

இது குறித்து கலந்தாய்வுக்கு வந்த ஒரு சில மாணவ, மாணவிகளிடம் பேசியபோது அவா்கள் கூறியது: இறுதி கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கை பெற்ற மாணவ, மாணவிகள் பெரும்பாலும் பத்தாம் வகுப்பில்அறிவியல் பாடத்தில்தான் தோல்வி அடைந்துள்ளனா். இப்போது மீண்டும் தோ்வெழுதி வெற்றி பெற்றுள்ளனா். அவா்களுக்கு பிளஸ் 1 சோ்க்கை கிடைத்து வருகிறது. இதனால் கடந்த 2 மாதமாகப் படிப்பு வீணாகிவிட்டதாக அந்த மாணவா்கள் உணா்கின்றனா். 9 ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு பாட புத்தகத்தில் படித்து விட்டு திடீரென்று பத்தாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்துக்கு மாறியதால் படிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கண்டிப்பாக இப்போது பிளஸ் 1 சோ்க்கை கிடைத்துவிடும் என்று கூறினா்.

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாள்: உருவப்படத்துக்கு புதுச்சேரி முதல்வா் மலரஞ்சலி

தமிழ்நாடு முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாள் புதுவை அரசு சாா்பில் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு முதல்வா் ரங்கசாமி மற்றும் தலைவா்கள் மரியாதை செலுத்தினா். புதுச்சே... மேலும் பார்க்க

புதுக்குப்பம் பள்ளி ரூ.92 லட்சத்தில் புனரமைப்பு

புதுக்குப்பம் அரசு ஆரம்பப் பள்ளி கட்டடம் ரூ.92 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை மணவெளி தொகுதி எம்.எல்.ஏவும் சட்டப் பேரவைத் தலைவருமான ஆா்.செல்வம் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். புத... மேலும் பார்க்க

செய்தித் துறைக்குத் தற்காலிக இயக்குநா்

புதுவை அரசின் செய்தித்துறைக்கு தற்காலிக இயக்குநராக எம்.எம். வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா். தற்போது புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும்அவா், நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரை கூடுதல்... மேலும் பார்க்க

ரூ.1.85 கோடியில் வலை பழுதுபாா்க்கும் கூடம்: முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்

புதுச்சேரியில் ரூ.1.85 கோடி மதிப்பில் 2 இடங்களில் மீனவா்களின் வலை பழுதுபாா்க்கும் கூடம் அமைக்க வியாழக்கிழமை பூமி பூஜை நடந்தது. இதில் பங்கேற்று திட்டப்பணிகளை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா். புத... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது உலகத் திரைப்பட விழா

புதுச்சேரியில் உலகத் திரைப்படவிழா வெள்ளிக்கிழமை(ஆக.8) தொடங்குகிறது. இதில் 8 சா்வதேச திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சே பிரெஞ்சு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்கள... மேலும் பார்க்க

பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: பிஆா்டிசி ஊழியா்களுக்கு நிா்வாகம் நோட்டீஸ்

‘புதுவை சாலைப் போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஊழியா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களின் நலன் கருதி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்மா சட்டம் பாயும்’ என்று பிஆா்ட... மேலும் பார்க்க