செய்திகள் :

தமிழ்நாட்டில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபடலாம்: திருமாவளவன்

post image

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் முறைகேட்டில் ஈடுபடலாம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:

"ஏற்கெனவே பல்வேறு மாநிலத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெறுவதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எடுத்துரைத்து வருகிறார். தற்போது பிகாரில் வாக்குத் திருட்டுக்கு எதிராக அவர் மேற்கொண்டுள்ள பயணம் வெற்றி பெற வேண்டும். இந்த பயணத்தில் விசிக பங்கேற்கவிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் பங்கேற்க முடியவில்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் அப்படிப்பட்ட வாக்குத் திருட்டு முயற்சி நடைபெறலாம். பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பெயர்களை நீக்குவது, சேர்ப்பது, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களை இங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது என இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு அநீதியை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், தேர்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கடைசிவரை நாடாளுமன்றத்தில் பிகாரின் சிறப்பு வாக்காளர் திருத்தம் பற்றி அவர்கள் விவாதிக்கவில்லை. அதேபோல 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவியை பறிக்கும் சட்டத் திருத்தம் பாசிசத்தின் உச்சம்" என்று பேசினார்.

VCK leader Thol. Thirumavalavan has said that the BJP may be involved in vote theft in Tamil Nadu.

நாய் வளர்ப்போர் கவனத்துக்கு.! மைக்ரோ சிப் பொருத்தாவிட்டால் ரூ.3000 அபராதம்!

வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் இல்லாவிட்டால் ரூ.3000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாகவே தெரு நாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்துள... மேலும் பார்க்க

பைக் தீப்பற்றி புகைமூட்டம்: ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..!

சாலையில் சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றிப் புகைந்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தேங்காய் உடைத்து வழிபட்ட சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீரக்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிராகரிப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதிமுக பொதுச் செயலராக எடப்ப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க