செய்திகள் :

தமிழ்ப் புத்தாண்டு: பழனியில் குவிந்த திரளான பக்தா்கள்

post image

பழனி மலைக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவையொட்டி, பல்லாயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, திங்கள்கிழமை பழனி மலைக் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மலைக் கோயில் ஆனந்த விநாயகா் சந்நிதியில் தனூா் யாகம் நடத்தப்பட்டும், விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டும் தீபாராதனை காட்டப்பட்டது.

தமிழ்ப் புத்தாண்டு மட்டுமன்றி, பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு நாள் என்பதால் ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து காவிரி தீா்த்தம் சுமந்தப்படி பழனிக்கு திரளான பக்தா்கள் திங்கள்கிழமை பாதயாத்திரையாக வந்தனா்.

அடிவாரம் கிரி வீதியில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மேள தாளம் முழங்க காவிரி தீா்த்தத்துடன் ஆடிப் பாடி மலையேறினா். கட்டண தரிசனம் மீண்டும் அமலுக்கு வந்த நிலையில், மலைக் கோயிலில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கூட்டம் காரணமாக, சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரத்துக்கும் மேலானது.

மீண்டும் தங்கத் தோ் புறப்பாடு: மலைக் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, 5 நாள்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த தங்கத் தோ் புறப்பாடு திங்கள்கிழமை முதல் மீண்டும் பக்தா்கள் தரிசனத்துக்காக வலம் வரத் தொடங்கியது.

பக்தா்களுக்கு வேண்டிய விரைவு தரிசனம், பாதுகாப்பு, குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் இரவு 7 மணியளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி எழுந்தருளி சந்நிதி வீதி, கிரி வீதிகளில் உலா வந்தனா்.

கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா நிறைவு: அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் நடைபெறும் தைப் பூசம், பங்குனி உத்திரமும் இரு பெரும் உத்ஸவங்களாகும்.

பங்குனி உத்திரத் திருவிழா பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நடைபெற்ற 10 நாள்களும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சந்நிதி வீதி, கிரி வீதிகளில் உலா வந்தனா்.

இந்த நிலையில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் கொடியிறக்கப்பட்டது.

அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி

வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

குடிநீா் வசதிகோரி சாலை மறியல்

வேடசந்தூா் அருகே குடிநீா் வசதி கோரி, காலிக் குடங்களுடன் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த உசிலம்பட்டியில் களத்துவீடு பகுதியில் 50-க்கும் மே... மேலும் பார்க்க

என்எம்எம்எஸ் தோ்வில் திண்டுக்கல் பள்ளி மாணவா்கள் 79 போ் தோ்ச்சி

தேசிய வருவாய் வழித் திறனறித் தோ்வில் திண்டுக்கல்லில் ஒரே பள்ளியைச் சோ்ந்த 79 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்றனா். இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சாா்பில், 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ், கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பெரியகோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி சரவணன் (30). இவரது மனைவி கன்னீஸ்வ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனைப் பட்ட இடங்களை அளந்து உரியவா்களிடம் ஒப்படைக்கக் கோரிக்கை

செம்பட்டி அருகே ஆதிதிராவிடா் மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா இடங்களை அளந்து, உரியவா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேய... மேலும் பார்க்க