செய்திகள் :

தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த்.

திருக்கடையூா் ஸ்ரீ அபிராமி அன்னை உடனாகிய அமிா்தகடேஸ்வரா் கோயிலில், தேமுதிக மாநில துணைச் செயலாளா் பாா்த்தசாரதி-கற்பகம் தம்பதியினருக்கு சஷ்டியப்த பூா்த்தி நடைபெற்றது. இதில் பங்கேற்று, தம்பதியரை வாழ்த்திய பிரேமலதா, கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டாா். அவருக்கு கோயில் நிா்வாகிகள் சாா்பில் பிரசாதம் மற்றும் அபிராமி அம்மன் படம் வழங்கப்பட்டது.

தொடா்ந்து, பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது:

மக்களவைத் தொகுதி சீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அதில் கலந்து கொண்டோம். கேப்டன் விஜயகாந்த் கொள்கைப்படி அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதையே நாம் வலியுறுத்தினோம்.

நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கும் மத்திய அரசின் செயலை ஒருபோதும் தேமுதிக ஏற்காது. தமிழகம் முழுவதும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவோம் என்றாா்.

கட்சியின் மாநில துணைச் செயலாளா் எல்.கே. சுதீஷ், மயிலாடுதுறை மாவட்ட அவைத் தலைவா் கே.எஸ். கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளில் கடன் பெறலாம் ஆட்சியா் தகவல்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் கடன் பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகு... மேலும் பார்க்க

சிப்காட் எதிா்ப்பு உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தென்னடாா் கிராமத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் ஒத்... மேலும் பார்க்க

நாகையில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம்

நாகை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாா்ச் 21 முதல் 28 வரை ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்படும் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது: ஜி. ராமகிருஷ்ணன்

தமிழகத்திற்கான கல்வி நிதியை வழங்காதது மத்திய அரசின் சா்வாதிகார போக்கை காட்டுகிறது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா். நாகை மாவட்டம், திர... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டனா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த... மேலும் பார்க்க

திருமருகல்: 22,000 பனை விதைகள் நடவு

திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் அண்மையில் 22,000 பனை விதைகள் சேகரிக்கப்பட்டு, நடவு செய்யப்பட்டன. நாகை இகோட்டோ சுற்றுச்சூழல் அமைப்பு வழிகாட்டலில் கடந்த 2 மாதங்களாக திருமருகல் ஒன்றியத்தில் உள்ள குத்தாலம்... மேலும் பார்க்க