செய்திகள் :

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்; விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

post image

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த மே 7 ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரது இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

ரோஹித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பின் அதிர்ச்சி நீங்குவதற்குள், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், அணியில் இரண்டு மூத்த வீரர்கள் இல்லையென்றால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். விராட் கோலியின் ஓய்வு பெறும் விருப்பத்தை மாற்றிக் கொள்ளுமாறு பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள்

டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் என விராட் கோலியிடம் முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு கேட்டுக் கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பத்தி ராயுடு

இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: தயவு செய்து ஓய்வு பெறாதீர்கள் விராட் கோலி. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு நீங்கள் தேவைப்படுகிறீர்கள். உங்களுக்குள் இன்னும் பல சிறப்பான ஆட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் முன்பு போல் இருக்காது. உங்களது முடிவு குறித்து மீண்டும் ஒருமுறை யோசியுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

முத்தரப்பு தொடர் இறுதிப்போட்டி: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபாரம்!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கையை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்தியா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் இடையேயான டி20 தொடர் நடைபெறுமா?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுவதால், வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான டி20 நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனுக்கு தொடக்க வீர்ராக களமிறங்க வாய்ப்பு கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார... மேலும் பார்க்க

எனது வெற்றிக்குக் காரணம் என்னுடைய அம்மா; சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது அம்மா ரஜ்னி டெண்டுல்கருக்கு அன்னையர் தின வாழ்த்துகளை த... மேலும் பார்க்க

கேப்டன் ரோஹித் சர்மாவை ஈடுசெய்யவே முடியாது: மைக்கேல் கிளார்க்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக மே.7ஆம் தேதி அறிவித்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. கடைசியாக ரோஹித் சர்மா பிஜிடி தொடரில் விளையாடினார். 3-2 என... மேலும் பார்க்க

ஸ்மிருதி மந்தனா சதம்: இலங்கைக்கு 343 ரன்கள் இலக்கு!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி இன்று (மே 11) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் ஸ்ம... மேலும் பார்க்க