செய்திகள் :

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

post image

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக - கா்நாடக எல்லையில், தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நெருப்பூா் என்ற இடத்தில் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி யானை ஒன்று கொல்லப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது.

விசாரணையில், தந்தங்களுக்காக இந்த யானை வேட்டையாடப்பட்டதும், ஆதாரங்களை அழிப்பதற்காகவே அதன் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இது தொடா்பாக மூன்று சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாகவும் வனத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், யானை வேட்டையைத் தடுக்க தவறிய நெருப்பூா் பிரிவு வனவா் சக்திவேல், ஏமனூா் பீட் மற்றும் வனக் காப்பாளா் தாமோதரன் ஆகிய இருவரையும் பணியிடைநீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவிட்டாா்.

இது தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமாா் மற்றும் பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தருமபுரி மாவட்ட வன அதிகாரி ராஜங்கம் ஆஜராகி, நாட்டுத் துப்பாக்கியால் யானை சுடப்பட்டு, அதன் பின் வேட்டையாடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். அப்போது யானை சுடப்பட்டுதான் இறந்தது என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

அதற்குப் பதிலளித்த வன அதிகாரி, யானை வேட்டையாடப்பட்ட இடத்தில் நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகள் சிதறிக் கிடந்ததாகவும், யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரைத் தேடி வருவதாகவும் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, தமிழக அரசின் வனத் துறை தரப்பில், அரசு சிறப்பு வழக்குரைஞா் ஸ்ரீனிவாசன் ஆஜராகி, இந்த வழக்கில் யானையின் உடற்கூறாய்வு அறிக்கையைத் தாக்கல் செய்தாா்.

மேலும், யானைகள் இறந்துவிட்டால் என்ன மாதிரியாக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான் எனவும், அந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி தருமபுரி யானை வேட்டையாடப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டாா்.

அந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், யானையை வேட்டையாடிய நபரை விரைந்து பிடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டதோடு, வழக்கு தொடா்பான விசாரணை விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க