செய்திகள் :

தருமபுரி குழந்தை திருமணம்: கடமையைச் செய்யாமல் இருக்க `லஞ்சம்' - பெண் இன்ஸ்பெக்டர் சிக்கியது எப்படி?

post image

ருமபுரி மாவட்டம், காரிமங்கலம் தாலுகாவுக்காவிற்கு உட்பட்ட கெண்டிகானஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற நிர்மல்குமார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமாக உள்ளார். சிறுமியை அவரின் பெற்றோர் மகப்பேறு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமியின் வயது தெரியவந்ததும், மருத்துவர்கள் உடனடியாக சமூக நலத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இன்ஸ்பெக்டர் வீரம்மாள்
இன்ஸ்பெக்டர் வீரம்மாள்

அவர்கள் மூலமாக, பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக சிறுமியின் குடும்பத்தினரிடம் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (வயது 50) என்பவர் ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத சிறுமியின் தாயார், இது குறித்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சிறுமியின் தாயாரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று கொடுத்து அனுப்பினர்.

லஞ்சம்
லஞ்சம்

அந்தப் பணத்தை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் சிறுமியின் தாயார் கொடுத்தார். லஞ்சப் பணத்தை கை நீட்டி வாங்கியபோது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்ஸ்பெக்டர் வீரம்மாளைக் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை பாய்கிறது. இந்த விவகாரம், தருமபுரி மாவட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

`தலைமுடி உதிர்வு' - தீக்குளித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவி; குமரியில் அதிர்ச்சி - என்ன நடந்தது?

உயிரை மாய்த்த கல்லூரி மாணவி அஸ்வினிகன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன். இவரது மனைவி ரூபி ஆன்றணி பாய். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஞானசெல்வன் வெளிநா... மேலும் பார்க்க

உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்த கணவன்

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத பெண்ணை தனி அறையில் அடைத்து பாம்பை விட்டுக் கடிக்க வைத்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண் ஷாநவாஸ் என்பவரைச் சமீபத்தில் திருமணம... மேலும் பார்க்க

உபி: காதலியைக் கொன்று உடலுடன் செல்ஃபி எடுத்த இளைஞர்; யமுனையில் தேடும் போலீஸ்! - என்ன நடந்தது?

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் காவல்துறையினர் 20 வயது பெண் கொலை வழக்கில் 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். அகன்ஷா என்ற அந்த 22 வயது பெண்ணின் உடல் சூட்கேஸில் அடைக்கப்பட்டு யமுனா நதியில் மூழ்கடிக்கப்பட்டு... மேலும் பார்க்க

"கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்யில் விரலை விடு" - குஜராத்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 30 வயது பெண் தனது கற்பை நிரூபிக்கக் கொதிக்கும் எண்ணெய்க்குள் விரலை விட வேண்டும் என அவரது நாத்தனாருடன் இன்னும் மூவர் இணைந்து வற்புறுத்தியதால் அவருக்குப் பலத்த தீக்... மேலும் பார்க்க

'பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை; தனியார் மது பாரில் ஒருவர் குத்திக் கொலை!' - புதுக்கோட்டை அதிர்ச்சி

புதுக்கோட்டை எஸ்.எஸ் நகரைச் சேர்ந்தவர் நித்தியராஜ் (வயது: 40). இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள டி.வி.எஸ் கார்னர் அருகில் உள்ள எஃப்.எல்.டு மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, காரைக... மேலும் பார்க்க

அரசு விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்; வைரலான வீடியோவால் பரபரப்பு

அரசு விடுதியில் தங்கிப் படித்த மாணவனை சக மாணவர்கள் தாக்கி நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்து வீடியோ எடுத்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செக்கானூரணி காவல் நிலையம்மதுரை மாவட்டம... மேலும் பார்க்க