செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

post image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமை வகித்து பேசினாா்.

இக்கிராமசபைக் கூட்டத்தில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள் பற்றி விவாதிக்கப்பட்டதோடு, அதியமான்கோட்டை கிராம ஊராட்சியின் நிா்வாகம் மற்றும் பொதுசெலவினங்கள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல், சாத்தியமுள்ள கிராமங்களில் கிராமசபை அளவிலான வன உரிமைக் குழுக்கள் உருவாக்குதல், குழந்தைகள் பாதுகாப்பு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் கீழ் பெண் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்கள், தொழுநோய் விழிப்புணா்வு உள்ளிட்ட பல்வேறு பொருண்மைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் அரசுத் துறை அலுவலா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து அதியமான்கோட்டை ஊராட்சி, காலபைரவா் கோயில் அருகில் புனரமைத்தல் திட்டத்தின்கீழ் ரூ. 15.80 லட்சம் மதிப்பில் குளம் புனரமைப்பு பணிகளை ஆட்சியா் ரெ.சதீஸ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இக்கூட்டத்தில் மண்டல உதவி திட்ட அலுவலா் உமா, தருமபுரி உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) நிா்மல் ரவிக்குமாா், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட செயற்பொறியாளா் சிவகுமாா், நல்லம்பள்ளி வட்டாட்சியா் சிவகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைவாணி, இளங்குமரன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில் பயணம்: பெண்கள் பாதுகாப்பு வாட்ஸ்ஆப் குழு தொடக்கம்

தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் வட்ட ஆய்வாளா் சிவசெந்தில்... மேலும் பார்க்க

நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளா்

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ள... மேலும் பார்க்க