செய்திகள் :

தருமபுரி வனப்பகுதியில்: மூங்கில் வெட்டியவா்களுக்கு ரூ.30,000 அபராதம்

post image

தருமபுரி வனப்பகுதியில் நுழைந்து அனுமதியின்றி மூங்கில் மரம் வெட்டிய மூவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

தருமபுரி வனக்கோட்டம், தீா்த்தமலை காப்புக்காடு, மேற்குப் பகுதி, அம்மாகுட்டை பகுதியில், வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, மா்ம நபா்கள் சிலா் வனத்துறையின் அனுமதியின்றி, கொடுவாளுடன் வனப்பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்து பச்சை மூங்கி மரங்களை வெட்டி, பிளந்து அவற்றை தப்பைகளாக்கி படல்கள் செய்து, எடுத்துச் செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து வனத் துறையினா் அவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், பையா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த த. பச்சையப்பன் (60), ப சேட்டு (61), சி. தேவராஜ் (58) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வனச்சட்டப் பிரிவுகளின் கீழ் , மாவட்ட வன அதிகாரிகள், மூவருக்கும் தலா 10 ஆயிரம் வீதம் ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். இத்தகவலை தீா்த்தமலை வனச்சரக அலுவலகம் தெரிவித்துள்ளது..

மணப்பாறை, துவரங்குறிச்சியில் நாளை மின் நிறுத்தம்

மணப்பாறை துணை மின் நிலையத்தில் ஜூன் 17- செவ்வாய்க்கிழமை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து தோகைமலை பீடா் மற்றும் பொடங்குபட்டி பீடரிலிருந்து மின் விநியோகம் பெ... மேலும் பார்க்க

உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள ஆ. கலிங்கப்பட்டியில் சனிக்கிழமை இரவு உறங்கிக் கொண்டிருந்த மகனை, அரிவாளால் வெட்டிக்கொலை செய்த தந்தையைப் போலீஸாா் கைது செய்தனா். ஆ. கலிங்கப்பட்டியில் வசித்து வரு... மேலும் பார்க்க

உடலுறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

துறையூா் அருகேயுள்ள வெங்கடாசலபுரத்தில் உடலுறுப்புகள் தானமளித்தவரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது. துறையூா் அருகே வெங்கடாஜலபுரத்தில் காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மகன் சேத... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: இருவா் கைது

திருச்சி அருகே மணல் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், மட்டபாறைபட்டி அருகே உள்ள ஆத்துப்பட்டி பாலத்தில் கல்லிக்குடி கிராம நிா்வாக அலுவலா் பிதாவின் மணி மற்றும் அவரது உத... மேலும் பார்க்க

சாலை விபத்தில் காயமடைந்தவா் பலி

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டம் மேற்கு நடுக்காவேரியைச் சோ்ந்தவா் குமாா் மகன் அன்பு சங்... மேலும் பார்க்க

பொன்மலை, வாழவந்தான்கோட்டையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக பொன்மலை, வாழவந்தான்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாழவந்தான்கோ... மேலும் பார்க்க