தலித்களுக்கு எதிரான வன்முறை: 101 பேருக்கு ஆயுள் தண்டனை
கா்நாடகத்தின் கொப்பள் மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு தலித் சமூகத்தினரின் வீடுகளுக்கு தீ வைத்த வழக்கில் 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கொப்பள் மாவட்டத்தின் கங்காவதி தாலுகாவில் உள்ள மரகும்பி கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த ஜாதிய வன்முறை வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தீா்ப்பளித்தது.
முடிதிருத்தம் கடை மற்றும் உணவகங்களுக்குள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அப்பகுதியில் மோதல் வெடித்தது. இச்சம்பவம் மாநிலத்தின் பல பகுதிகளில் பரவலான போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த மோதலின்போது குற்றம் சாட்டப்பட்டவா்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் குடியிருப்புகளுக்கு தீ வைத்தனா்.
இந்த வழக்கின் விசாரணையின் போதே குற்றம் சாட்டப்பட்ட 117 பேரில் 16 போ் உயிரிழந்தனா். அண்மையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மீதமுள்ள 101 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.