செய்திகள் :

`தலைக்கு ரூ.60 லட்சம்' அமித் ஷா கெடு; காட்டில் 25 கி.மீ நடந்து சரணடைந்த 61 நக்சலைட் - பின்னணி என்ன?

post image

மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்கள் ஆதிக்கம் இருக்கிறது. அருகில் தெலங்கானா மற்றும் சத்தீஷ்கர் மாநில எல்லைகள் இருப்பதால் மூன்று மாநில எல்லையில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கி இருக்கின்றனர்.

அவர்களுக்கு எதிராக தொடர்ந்து தேடுதல் வேட்டை ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் அவர்களிடம் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைய செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டுதான் இருந்தது.

மகாராஷ்டிராவில் நக்சலைட்களின் கமாண்டரும், அந்த அமைப்பின் மூத்த உறுப்பினருமான மல்லோஜுலா வேனுகோபால் ராவ் என்ற பூபதியை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடி வந்தனர்.

நக்சலைட் தேடுதல் வேட்டை
நக்சலைட் தேடுதல் வேட்டை

அவரது தலைக்கு ரூ.60 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் மல்லோஜுலா வேனுகோபால் தனது கூட்டாளிகள் 61 பேருடன் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்துள்ளார்.

அவர் தங்களிடம் இருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கி உட்பட ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளார். பூபதி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போர்நிறுத்தம் குறித்து தனது அமைப்பினரிடம் பேசியிருந்தார்.

ஆனால் அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் தனது ஆதரவாளர்களுடன் சரணடைந்து இருக்கிறார்.

நக்சலைட் தேடுதல் வேட்டை
நக்சலைட் தேடுதல் வேட்டை

கடந்த 40 ஆண்டுகளாக மகாராஷ்டிரா, தெலங்கானா, சத்தீஷ்கரில் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலை முன்னின்று நடத்திய பூபதி, அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளராகவும், மூத்த பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருந்தார்.

நக்சலைட்களின் ஒவ்வொரு தாக்குதலிலும் இவருக்குப் பங்கு இருந்தது. இந்நிலையில் பூபதி தனது ஆதரவாளர்கள் 61 பேருடன் நேற்று பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார்.

அவர்களை பாதுகாப்புடன் அழைத்துச்செல்லக்கூடிய கமாண்டோ படை கட்சிரோலியின் ஹொட்ரி என்ற கிராமத்தில் காத்திருந்தது.

பூபதி தனது ஆதரவாளர்கள் 61 பேருடன் தங்களது ஆயுதங்களுடன் மலை உச்சியில் இருந்து 25 கிலோமீட்டர் அடர்ந்த காட்டிற்குள் நடந்தே சரணடையும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர்களை கமாண்டோ படையினர் பத்திரமாக கட்சிரோலிக்கு பஸ்களில் அழைத்துச்சென்றனர்.

அவர்கள் இன்று மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் டிஜிபி ரேஷ்மி சுக்லா முன்னிலையில் முறைப்படி அணிவகுத்து சரணடைகின்றனர்.

அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கி உட்பட 54 ஆயுதங்களையும் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

அமித் ஷா
அமித் ஷா

சமீபத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா நக்சலைட்களிடம் சரணடையும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று பூபதி தனது ஆதரவாளர்களிடம் சரணடையலாம் என்றும், மத்திய படையும், மகாராஷ்டிரா கமாண்டோ படையும் எந்நேரமும் தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று 61 பேர் சரணடைய முன்வந்தனர். பூபதியுடன் மற்றொரு கமாண்டர் பிரபாகரனும் சரணடைவதற்காக வந்துகொண்டிருந்தார். ஆனால் வரும் வழியில் அவர் சில நான்கு பெண் நக்சலைட்களுடன் மாயமாகிவிட்டார்.

யார் இந்த பூபதி?

69 வயதாகும் பூபதி பி.காம் பட்டதாரியாவார். 1956ஆம் ஆண்டு பிறந்த பூபதி கல்லூரி படிப்பை முடித்த பிறகு இடதுசாரிக்கொள்கையால் கவரப்பட்டு அந்த அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இவரது சகோதரர் கொண்டெஷ்வர் ராவும் நக்சலைட் அமைப்பில் மூத்த நிர்வாகியாக இருந்தார்.

பூபதி

அவர் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு பிறகு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பூபதி சரணடைவது குறித்து பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து அவரை சரணடைய செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

2011ஆம் ஆண்டு 76 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் கொல்லப்பட்டதில் பூபதிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

'ட்ரம்புக்கு நோபல் பரிசு' - வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்‌ஷன் - என்ன நடந்தது| Viral Video

இஸ்ரேல் - காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்தார். அதன் அடிப்படையில், இருதரப்பின் ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது. எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் (Sharm El... மேலும் பார்க்க

"அழகா இருக்கீங்க; புகைபிடிப்பதை நிறுத்தலாம்ல" - இத்தாலி பெண் பிரதமருக்கு துருக்கி பிரதமர் அட்வைஸ்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய கிழக்கில் உள்ள காசாவில் நடந்து வந்த போர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்திருக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் இருக்கும் பிணைக் கைதிகள் அனைவர... மேலும் பார்க்க

திருமணத்தை நிறுத்திவிட்டு, கட்டிப்பிடித்த மணமகனிடம் கட்டணம் வசூல் செய்த சீனப்பெண் - என்ன நடந்தது?

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். அதுமட்டுமில்லாமல் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையிடம் இருந்து 'கட்டிப்பிடித்ததற்கான கட்டணம்' கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ... மேலும் பார்க்க

இந்திய சிறுவனுக்கு ரூ.24,000-க்கு சைக்கிள் பரிசளித்த அமெரிக்க யூடியூபர் - நெகிழ்ச்சியான சம்பவம்

அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியும் யூடியூபருமான ஜெ என்பவர் , இந்திய சிறுவன் ஒருவனுக்கு புதிய சைக்கிளைப் பரிசளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது நேரலை வீடியோவின்போது சந்தித்த ச... மேலும் பார்க்க

``20 ஆண்டுகள் பிள்ளையைப்போல் வளர்த்தேன்'' - வெட்டப்பட்ட அரசமரத்தைப் பார்த்து கதறியழுத மூதாட்டி

ஒரு மரக்கன்றை நட்டு, அதனை மரமாக வளர்த்து பெரியதாக மாற்ற பல ஆண்டுகள் பிடிக்கும். 10 ஆண்டுகளுக்கு மேல் வளர்த்தால் மட்டுமே மரக்கன்று ஓரளவு பெரிய மரமாக மாறும்.அவ்வாறு ஆசையாக வளர்த்த மரத்தை யாராவது வெட்டின... மேலும் பார்க்க

``முதலில் மோசடி கால் என நினைத்தேன், ஆனால்" - லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு வென்ற மூதாட்டி

அமெரிக்காவில் வசிக்கும் பெண் ஒருவருக்கு லாட்டரியில் ஒரு மில்லியன் டாலர் பரிசு விழுந்திருப்பதாக வந்த ஃபோன் காலை முதலில் மோசடி அழைப்பு என நினைத்து புறக்கணித்திருக்கிறார். அதன் பின்னர் உண்மை என அறிந்ததும... மேலும் பார்க்க