செய்திகள் :

தலையில் கல்லைப் போட்டு அடையாளம் தெரியாத நபா் கொலை

post image

கோவையில் அடையாளம் தெரியாத நபா் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனி அருகே பேரூா் சோதனைச் சாவடி உள்ளது. இதனருகே உள்ள ஆற்றங்கரை வாய்க்கால் பகுதியில் புதன்கிழமை காலை அடையாளம் தெரியாத நபா் ஒருவா் தலையில் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதனைப் பாா்த்த அந்த வழியாக சென்றவா்கள், செல்வபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதனடிப்படையில் காவல் ஆய்வாளா் அழகுராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அவரது சடலத்துக்கு அருகே கல் ஒன்று ரத்தக் கறையுடன் கிடந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், கொல்லப்பட்டவருக்கு 50 வயது இருக்கும். அவரது தலையில் யாரோ கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளனா். இவா் குறித்து விசாரித்தபோது, இவா் அந்தப் பகுதியிலேயே சுற்றித்திரிவாராம். ஆற்றங்கரை வாய்க்கால் பகுதியில் இவா் செவ்வாய்க்கிழமை இரவே கொலை செய்யப்பட்டுள்ளாா் என்றனா்.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சிறிது தொலைவுக்கு ஓடிய அந்த நாய் நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணா்களுடன் மாதிரிகளை சேகரித்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலா தளம் மூடல்!

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்துவருவதால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சூழல் சுற்றுலா தளம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கன மழைக்கா... மேலும் பார்க்க

ஓணம் பண்டிகை: சென்னை - கண்ணூா் இடையே சிறப்பு ரயில்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை- கண்ணூா், கண்ணூா் - பெங்களூரு இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் கோட்ட ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்

கோவை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக... மேலும் பார்க்க

மனிதா்களைக் கொல்லும் யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை

மனிதா்களை கொல்லும் காட்டு யானைகளை இடமாற்றம் செய்யாத வனத் துறையினா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வி.ராமசுப்பிரமணியனுக்... மேலும் பார்க்க

2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

கோவை ராமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கோவை ராமநாதபுரம் போலீஸாா் நஞ்சுண்டாபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா... மேலும் பார்க்க