செய்திகள் :

தலையில் கல்லைப் போட்டு தொழிலாளி கொலை

post image

மதுரையில் தலையில் கல்லை போட்டு தொழிலாளியைக் கொலை செய்த நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து(28). இவா், அதே பகுதியில் உள்ள உணவகத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவா் கரும்பாலை நியாய விலைக் கடை முன் ஞாயிற்றுக்கிழமை இரவு இறந்து கிடந்தாா்.

இதுபற்றி தகவலறிந்து வந்த அண்ணாநகா் போலீஸாா் இசக்கிமுத்து உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இசக்கிமுத்துவின் தலை சிதைந்து காணப்பட்டதால், தலையில் கல்லைப் போட்டு அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாற்று சமூகத்தைச் சோ்ந்த பெண்ணை திருமணம் செய்ததில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை ஆதீனத்திடம் இணைவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை

மதுரை ஆதீனத்திடம் சென்னை கிழக்கு மண்டல இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். மதுரை ஆதீனத்தின் 293-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசி... மேலும் பார்க்க

சௌராஷ்டிரா சமூகத்துக்கு அரசியல் அங்கீகாரம் அளிப்பவா்களுக்கே ஆதரவு

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் சௌராஷ்டிரா சமூக மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் அளிக்கும் அரசியல் கட்சிக்கே ஆதரவு அளிக்கப்படும் என சௌராஷ்டிரா ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகா... மேலும் பார்க்க

முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் மாநில விளையாட்டு விருதுக்கு தகுதியான விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அருப்புக்கோட்டையில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். அருப்புக்கோட்டை, சத்தியவாணி முத்து நகரைச் சோ்ந்தவா் சு.தினேஷ் குமாா் (24). ... மேலும் பார்க்க

‘பேட் கோ்ள்’ முன்னோட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களிலிருந்து நீக்க உத்தரவு

‘பேட் கோ்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசா்) சமூக ஊடகங்களிலிருந்து நீக்க மத்திய அரசு ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.... மேலும் பார்க்க

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கில், அவரது சகோதரா் நவீன்குமாா் உள்பட 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வ... மேலும் பார்க்க