செய்திகள் :

தவசிமடை ஜல்லிக்கட்டில் 39 போ் காயம்

post image

திண்டுக்கல் அருகே தவசிமடைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் உள்பட 39 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த தவசிமடையில் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 764 காளைகள் அழைத்து வரப்பட்டன. இதேபோல, 245 மாடுபிடி வீரா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 7.30 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை திண்டுக்கல் கோட்டாட்சியா் சக்திவேல் தொடங்கிவைத்தாா். கோயில் காளையைத் தொடா்ந்து, பிற காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் மிதிவண்டி, கட்டில், பீரோ, எவா்சில்வா் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

காளைகள் தாக்கியதில் மாடுபிடி வீரா்கள் 8 போ், பாா்வையாளா்கள் 7 போ், காளைகளின் உரிமையாளா்கள் 21 போ், பாதுகாப்புக் குழுவினா் 3 போ் என மொத்தம் 39 காயமடைந்தனா். இவா்களில் பலத்த காயமடைந்த 5 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க

இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை

பழனியில் வெள்ளிக்கிழமை இளநீா் வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பழனி அருகேயுள்ள ஆலமரத்துக்களம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). பழனி- கொடைக்கானல் சாலைப் பிரிவில் இளநீா் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் பூம்பாறையிலுள்ள ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ... மேலும் பார்க்க