செய்திகள் :

தவெகவில் திமுக, அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள்! யார்யார்?

post image

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று இணைந்துள்ளனர்.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கட்சியை தொகுதிவாரியாக வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அவர்களின் கட்சிக்குள் முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி, தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக, அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

2011 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆர். ராஜலட்சுமி தவெகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியில் முக்கியத்துவம் அளிப்பதில்லை எனக் குற்றச்சாட்டை முன்வைத்து சில நாள்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்த ராஜாட்சுமி, தற்போது தவெகாவில் இணைந்துள்ளார்.

திமுகவைச் சேர்ந்த வைகுண்டம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வம், அதிமுகவைச் சேர்ந்த வால்பாறை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஸ்ரீதரன் ஆகியோரும் தவெகவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி, நீதிபதி

விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அருண்ராஜ், சமீபத்தில் விருப்ப ஓய்வுபெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், ஐஆர்எஸ் பணியில் இருந்து இவரை மத்திய அரசு விடுவித்தது.

மேலும், முன்னாள் நீதிபதி சி. சுபாஷ், ஜேப்பியார் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மரிய வில்சன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.

இதையும் படிக்க : தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி : ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ரூ. 10,000-க்கு டிக்கெட் எடுத்தும் காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தேர்தல்: 6 பேர் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்பு!

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ள நிலையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றித் தேர்வாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப... மேலும் பார்க்க

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக்கோரிய தமிழக அரசின் மனுவை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார். பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத... மேலும் பார்க்க

சென்னையில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் இன்று காலை பரவலாக வானம் மேகமூட்டத்துடன் நிலவி வந்த நிலையில், காலை 8 மணிக்கு மேல் வெய்யில் வழக்கம்போல் வெளுத்துக்கட்டத் தொடங்... மேலும் பார்க்க