செய்திகள் :

தவெக மாநாடு: 100 டிகிரி வெயில்; டிரோன்கள் மூலம் குடிநீர் விநியோகம்!

post image

தவெக மாநாட்டுத் திடலில் கடும் வெய்யில் காரணமாக தொண்டர்கள் பலர் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் டிரோன்கள் மூலமாக குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி கிராமத்தில் இன்று (ஆக.21) மாலை நடைபெற உள்ளது.

இதற்காக 506 ஏக்கரில் மாநாட்டு திடல், பார்க்கிங், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை கருதி அவசர மருத்துவ உதவிக்காக மாநாடு நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கில் மருத்துவ ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நேற்று நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 10 மணி அளவில் மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின.

மாநாடு நடைபெறும் இடத்தில் வெய்யில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால் தொண்டர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெய்யில் காரணமாக தரை விரிப்புகளை கிழித்து எடுத்து தற்காலிக கூடாரம் அமைத்து ரசிகர்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். சிலர் இருக்கைகளை நிழற்குடை போல் மாற்றி தலையில் பிடித்துக் கொண்டனர். பலரும் குடைகளுடன் வந்திருக்கின்றனர்.

கடும் வெய்யில் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடும் வெப்பம் காரணமாக தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் டிரோன்கள் மூலமாகவும் குடிநீர் பாட்டில்கள் மற்றும் முதலுதவி கிட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குழந்தைகளுடன் வர வேண்டாம் என்று கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியும் பலரும் தங்கள் குழந்தைகளுடன் வந்து சிரமப்படுகின்றனர்.

volunteers are suffering due to the intense heat at the TVK conference venue, drinking water bottles are being distributed via drones.

இதையும் படிக்க |இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

ரிதன்யா தற்கொலை வழக்கு: மூவருக்கு நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாது... மேலும் பார்க்க

தவெக மாநாட்டுக்கு விஜய் வருகை! புறப்பட்ட தொண்டர்கள்!!

திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் தொடங்கியது. விழா நடைபெறும் மேடைக்கு கட்சித் தலைவர் விஜய் வந்த நிலையில், அவரைப் பார்த்ததும், மாநாட்டுக்கு வந்திர... மேலும் பார்க்க

2026-ல் ஏலியன்களை சந்திக்கப் போகும் மனிதர்கள்! அது மட்டுமா?

வரும் 2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.கடந்த 1996ஆம் ஆண்டே அவர் மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை அ... மேலும் பார்க்க

பெரியாரின் பேரன்... தவெக மாநாட்டில் விஜய்யின் குரலில் ஒலிக்கும் கொள்கைப் பாடல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில் விஜய்யின் குரலில் உருவான, அக்கட்சியின் கொள்கைப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின், 2-வது மாநில மாநாடு இன்று (ஆக.21) நடைபெற்ற... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில்கள் 7 நாள்களுக்கு ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் 7 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோ... மேலும் பார்க்க

தவெக மாநாட்டு மேடைக்கு வந்தார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாட்டு மேடைக்கு அந்தக் கட்சியின் விஜய் வருகை தந்துள்ளார்.மாநாடு மாலைக்கு மேல் துவங்கும் என்று கூறி இருந்த பொழுதும் சென்னை, கோவை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக... மேலும் பார்க்க