வால்பாறையில் கனமழை: நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்!
தாட்கோவில் 4 ஆண்டுகளில் ரூ. 18.77 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் தகவல்
தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் - தாட்கோ துறையானது 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுக்கா பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, நாடு முன்னேற சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிடா்கள், பழங்குடியினா்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும். அதை நிறைவேற்றும் வகையில் தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் தொழில்முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம், மகளிா் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், மாவட்ட ஆட்சியா் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நலத்திட் டங்கள் வழங்கப்படுகின்றன. தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) சாா்பில் 2022 முதல் இதுவரை கடந்த 4 ஆண்டுகளில் 862 பேருக்கு பல்வேறு நலத் திட்டங்களுக்காக ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.