செய்திகள் :

தாமலேரிமுத்தூர்: `விபத்து' அபாயத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கூட்ரோடு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 179A, ஆம்பூர், வேலூர், கிருஷ்ணகிரி, சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகளால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையில் வாகனங்கள் திசை மாறி செல்லும் இடத்தில் எந்த பாதுகாப்பு முன்னெடுப்புகளும்  இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் இப்பகுதியில் சாலையைக் கடக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் பேசியபோது, “நெடுஞ்சாலை என்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் வருகின்றன. சென்னை நோக்கி செல்லும் வாகனங்களும், திருப்பத்தூர் மற்றும் நாட்டறம்பள்ளி நோக்கி செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் முந்த முயல்வதால், இங்கு விபத்து ஏற்படும் சூழல் உருவாகிறது. சிறிது தொலைவிற்கு முன்னரே வேகத்தைக் குறைத்து வர வேண்டும். ஆனால் ஒரு சிலர் எதையும் பொருட்படுத்தாமல் வருவதால் வாரத்திற்கு ஒரு விபத்தாவது இங்கு நடந்தேறுகிறது‌.

இதனால் மாணவர்களும் பொதுமக்களும் சாலையைக் கடக்க திக்கு முக்காடுகின்றோம். எனவே விபத்துகளைத் தடுத்து வாகனங்கள் பாதுகாப்புடன் செல்ல அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக விகடன் தளத்தில் ஸ்பாட் விசிட் அடித்து தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக்கை கோரும் மக்கள்! என்ற‌ தலைப்பில் செய்தி ஒன்றினை மே22-ம் தேதி வெளியிட்டிருந்தோம். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தோம். விகடனில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, (03/06/2025) அன்று அதிகாரிகள் விபத்து சூழலைக் கருத்தில் கொண்டு விரைந்து நான்கு பேரிகார்டுகள் அமைத்து, விபத்து அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றனர். 

Disney cruise: நடுக்கடலில் விழுந்த 5 வயது மகள்; சட்டென குதித்த தந்தையின் வீரச் செயல்| Viral Video

டிஸ்னி க்ரூஸ் லைன் கப்பல் அமெரிக்கா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாட்ட கப்பல் சுற்றுலாப் பயணத்தை நடத்தி வருகிறது. குறிப்பாக, அமெரிக்காவில் பல பகுதிகளில் இந்தக் கப்பல் சு... மேலும் பார்க்க

'130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது பாஜக அரசு' - எம்.பி சு.வெங்கடேஷன் சொல்வது என்ன?

எம்.பி சு.வெங்கடேஷன் இரயில் கட்டண உயர்வை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ இன்று முதல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது க... மேலும் பார்க்க

பழனி : திருமண மண்டபம் கட்ட வெளியான அரசாணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - நடந்தது என்ன?

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையைச் சேர்ந்த இந்து சமயப்... மேலும் பார்க்க

Tatkal Ticket, பான் கார்டு, ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு... இன்று முதல் அமலாகும் விதிகள் என்னென்ன?

பான் கார்டு, அதார் கார்டு என மத்திய அரசில் இன்று முதல் அமலாக உள்ள 6 விஷயங்களைப் பார்க்கலாம்... வாங்க...1. ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கலின் கடைசித் தேதி ஜூலை 31 ஆக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு வரு... மேலும் பார்க்க

"ரூ.100 கோடி பிராஜெக்ட்; விபத்துக்காகவே ஒரு சாலை..." - மரங்களை நடுவே அப்படியே விட்டு போடப்பட்ட சாலை!

பீகாரில் ரூ. 100 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின் ஒருபகுதியாக மாவட்ட நிர்வாகம், தலைநகர் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள ஜெகனாபாத்தில் சாலையின் நடுவே உள்ள விபத்து ஏற்படும் வகையில் இருக்... மேலும் பார்க்க

நீலகிரி: சுடுகாடு கேட்ட நபர், `வீடு கட்டிக்கொடுக்கும் திட்டம் இல்லை'- அதிகாரிகள் குதர்க்கமான‌ பதில்!

நீலகிரி மாவட்டம், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சூரை அடுத்து தொட்டக்கொம்பை, பாரதிநகர், சேரனூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வரும் இந்த பகுதியில் முறையான மயானம் கிடையாது என்ப... மேலும் பார்க்க