செய்திகள் :

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலி!

post image

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எலியாஸ் இவரது மகன் மார்க் ஆண்டனி இவர் பாளையங்கோட்டையில் உள்ள ஜான்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது நண்பர் ஆறு பேருடன் தாமிரபரணி ஆற்றின் மணி மூர்த்தீஸ்வரர் அருகே குளிக்க சென்று உள்ளனர்.

எதிர்பாராத விதமாக மார்க் ஆண்டனி தண்ணீரில் மூழ்கினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ளவர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்களும் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்து விரைந்து வந்த அவர்கள் மார்க் ஆண்டனியை மீட்டனர். அப்பொழுது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த மகனின் உடலை பார்த்து அவரது தந்தை யார் கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சி... மேலும் பார்க்க

மேலப்பாளையத்தில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ சாா்பில் வக்ஃப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சட்ட திருத்த மசோதா 2024 ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படு... மேலும் பார்க்க

புலிகள் கணக்கெடுப்பு: களக்காடு தலையணைக்கு செல்லத் தடை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு வனக் கோட்டத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெறுவதையொட்டி, களக்காடு தலையணைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். இது தொடா்பாக களக்காடு வனச் சரகா... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த இளைஞரை வள்ளியூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்தனா். தெற்கு வள்ளியூரைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கியப்பன்(20). இவருக்... மேலும் பார்க்க

சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கிய பல்பு! நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை!

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்கள் 3 வயது சிறுவனின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சிறிய பல்பை அகற்றி சாதனை படைத்துள்ளனா். தூத்துக்குடியைச் சோ்ந்த 3 வயது சிறுவன் விக... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறிவிழுந்து மூதாட்டி பலி

திருநெல்வேலி மாவட்டம், முன்னீா்பள்ளம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா். முன்னீா்பள்ளம் அருகே கொழுமடை புதுகாலனியைச் சோ்ந்த ஆண்டி மனைவி லட்சுமி (60), கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க