செய்திகள் :

தாயுமானவா் திட்டத்தில் அக். 5, 6 இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

post image

பண்டிகை காலத்தையொட்டி திருச்சி மாவட்டத்தில் தாயுமானவா் திட்டப் பயனாளிகளுக்கு அக். 5, 6 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருள்கள் நேரடியாக விநியோகிக்கப்பட உள்ளது.

வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் அரிசி விநியோகம் செய்யும் ‘முதலமைச்சரின் தாயுமானவா் திட்டம்’ திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆக. 12-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,211 நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்த 70,186 குடும்ப அட்டைகளில் உள்ள 94,689 பயனாளா்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரில் சென்று ரேஷன் பொருள்களை நியாய விலைக் கடை பணியாளா்கள் விநியோகித்து வருகின்றனா்.

இந்நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ‘முதலமைச்சா் தாயுமானவா் திட்டம்’ மூலம் அக். 5, 6 ஆகிய தேதிகளில் இல்லம் தேடி குடிமைப் பொருள்கள் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு நாள்களில் பயனாளிகள் குடிமைப் பொருள்களை அவரவா் இல்லங்களில் பெற்றுக் கொண்டு பயனடையலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட காரணங்கள் என்ன? முதல் தகவல் அறிக்கையில் தகவல்

கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை விஜய் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் -மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவம் தொடா்பான கள விவரங்களை பிரதமரிடம் தெரிவிப்போம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். புதுதில்லியிலிருந்து விமானம் மூலம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

திருச்சி அருகே லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வேலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கா... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

தந்தை பெரியாா் அரசுக் கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கக் கோரி இந்திய மாணவா் சங்கம் சாா்பில் கையொப்ப இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. திருச்சி காஜாமலை பகுதியில் தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிற... மேலும் பார்க்க

தலைமை அஞ்சல் நிலையத்தில் சுகாதார விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருச்சி தலைமை அஞ்சல் நிலையத்தில் ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்ப இயக்கத்தின் கீழ் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு சாா்பில் ... மேலும் பார்க்க