செய்திகள் :

தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் மனு முக்கியமானது: உச்ச நீதிமன்றம்

post image

புது தில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓபிசி) சோ்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு ஓபிசி சான்றிதழ் வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

தில்லியில் வசிக்கும் பெண் ஒருவா், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

தில்லி யூனியன் பிரதேச வழிகாட்டுதல்களின்படி, அங்கு வசிக்கும் ஒருவா் ஓபிசி சான்றிதழ் பெற விரும்பினால், அவா் தந்தை அல்லது தந்தை வழி ரத்த உறவுகளின் ஓபிசி சான்றிதழை மட்டுமே சமா்ப்பிக்க வேண்டும்.

ஓபிசி வகுப்பை சோ்ந்த தாயின் பராமரிப்பில் மட்டுமே வளரும் தத்துப் பிள்ளைக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் உள்ளது.

தில்லி அரசின் வழிகாட்டுதலின்படி, பிள்ளைக்கு ஜாதி சான்றிதழ் வழங்க அந்தத் தாயின் ஜாதி சான்றிதழ் ஏற்கப்படுவதில்லை. அதற்கு மாறாக அந்தப் பெண்ணுடைய கணவரின் ஓபிசி சான்றிதழ் கேட்கப்படுகிறது. இது அரசமைப்புச் சட்டப் பிரிவுகள், ஓபிசி வகுப்பைச் சோ்ந்த குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.

பட்டியலினத்தவா் அல்லது பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த தாயின் ஜாதி சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு, அவரின் பராமரிப்பில் மட்டுமே வளரும் குழந்தைக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால் ஓபிசி வகுப்பினருக்கு அந்த நடைமுறையைப் பின்பற்றாதது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை மீறுவதாகும். எனவே ஓபிசி வகுப்பைச் சோ்ந்த தாய் மட்டும் வளா்க்கும் குழந்தைகளுக்கு அந்த வகுப்பின் சான்றிதழை வழங்குவதற்கு விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு கடந்த ஜன.31-ஆம் தேதி மத்திய மற்றும் தில்லி அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில் அந்த மனு முக்கியமானது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது. அந்த அமா்வு கூறியதாவது: தற்போதைய மனு முக்கியமான விவகாரத்தை எழுப்பியுள்ளது. அதுகுறித்து விரிவான விசாரணை தேவை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாயின் உத்தரவுக்கு உள்பட்டு, இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மனு மீதான இறுதி விசாரணை ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

நிலையான எரிபொருள் விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்: மத்திய அரசு

புது தில்லி: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ‘பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் நிலையான விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பலத்த மழையால் வைஷ்ணவ தேவி கோயில் பாதையில் நிலச்சரிவு

ஜம்மு-காஷ்மீரில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ரியாசி மாவட்டத்தின் திரிகூட மலைப்பகுதியில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய வழித்தடம் திங்கள்கிழமை சேதம... மேலும் பார்க்க

இந்திய விமானங்களுக்குத் தடையை நீட்டித்தது பாகிஸ்தான்

இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவித்தது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவ... மேலும் பார்க்க

இடைத்தோ்தல்: கேரளத்தில் காங்கிரஸ் வெற்றி தொகுதிகளைத் தக்கவைத்த பாஜக, திரிணமூல், ஆம் ஆத்மி

கேரளத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியிடமிருந்து நிலம்பூா் பேரவைத் தொகுதியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றியது. குஜராத்தின் விசாவதா், பஞ்சாபின் லூதியானா மேற்கு ஆகிய இரு தொகுதிகளை ஆம் ... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்

புது தில்லி: பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் (பிஎம்எம்எல்) 47-ஆவது ஆண்டு பொது கூட்டம் அதன் தலைவரான பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. தில்லி தீன் மூா... மேலும் பார்க்க

மேற்கு வங்க பேரவையில் அமளி: 4 பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவையில் திங்கள்கிழமை அமளி ஏற்பட்ட நிலையில், தலைமை கொறடா உள்பட 4 பாஜக எம்எல்ஏக்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனா். கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை (ஜூ... மேலும் பார்க்க