செய்திகள் :

தாய் மீது பாட்டிலை வீசினார் அன்புமணி: கண்கலங்கிய ராமதாஸ்!

post image

கட்சிக்குள் நிலவிய பிரச்னை குறித்து கேள்வி எழுப்பிய தாயின் மீதே அன்புமணி பாட்டிலை வீசினார் என்று பாமக நிறுவனரும் அவரின் தந்தையுமான ராமதாஸ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே நிலவி வந்த உள்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது.

கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமனம் செய்தார்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய அன்புமணிக்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசினார்.

அப்போது, அன்புமணி அவரது தாய் சரஸ்வதியை தாக்கியது தொடர்பாக ராமதாஸ் கண்கலங்கியபடி பேசினார்.

அவர் பேசியதாவது:

”அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டார்.

அப்போது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி. நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள்தான்” எனத் தெரிவித்தார்

இதையும் படிக்க : அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு: ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுத... மேலும் பார்க்க

கச்சத்தீவை மீட்க வேண்டும்: திமுக பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்

மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட 27 தீர்மானங்கள் மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ம... மேலும் பார்க்க

அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழ... மேலும் பார்க்க

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட்: முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி

தேமுதிகவுக்கு அடுத்தாண்டு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே. பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் அமைச்சர் கே .பி. முனுசாமி இன்று(ஜூன் 1) செய்தியாளர்களை சந்தித்தார். அப... மேலும் பார்க்க