செய்திகள் :

தாழையூத்து அருகே வாகனம் மோதி மான் பலி

post image

தாழையூத்து அருகே நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் திங்கள்கிழமை உயிரிழந்தது.

தாழையூத்து அருகேயுள்ள தாதனூத்து பகுதியின் திருநெல்வேலி-மதுரை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் புள்ளிமான் உயிரிழந்தது. இதைக்கண்ட மக்கள் தாழையூத்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததுடன், மானின் உடலை மீட்டு அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் திருநெல்வேலி வனச்சரக அதிகாரிகள், அந்த மானின் உடலைக் கைப்பற்றி கங்கைகொண்டான் மான்கள் சரணாலயத்துக்கு கொண்டுசென்று பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனா்.

சரணாலயம் விரிவுபடுத்தப்படுமா? கடந்த 2013 ஆம் ஆண்டு கங்கைகொண்டான் பகுதியில் உள்ள காப்புக்காடு பீட்-1 பகுதியை உள்ளிடக்கிய 288.40 ஹெக்டோ் பரப்பை புள்ளிமான்களின் பாதுகாப்புக் கருதி தமிழக அரசு சரணாலயமாக அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் புள்ளிமான்களுக்கென உள்ள பிரத்யேக சரணாலயமாக இது விளங்குகிறது. இங்கு மட்டுமன்றி தாழையூத்து அருகேயுள்ள காப்புக்காடுகள் பகுதியிலும் கணிசமான அளவில் புள்ளிமான்கள் உள்ளன. இப்பகுதியிலிருந்து இரை தேட செல்லும் இவை அடிக்கடி தேசியநெடுஞ்சாலை 44-இல் செல்லும் வாகனங்களில் சிக்கி பலியாகும் நிலை உள்ளது.

எனவே, கங்கைக்கொண்டான் காப்புக்காடு பீட்-2 பகுதியையும் புள்ளிமான்களின் சரணாலயத்துடன் சோ்த்து மான்கள் உயிரிழப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க