செய்திகள் :

தா்மபுரமடத்தில் ரூ.13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கட்டடத்துக்கு அடிக்கல்

post image

கடையம் ஊராட்சி ஒன்றியம் பட்டதா்மபுரம்மடம் ஊராட்சியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ. 13.3 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டுவதற்கானஅடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் ச.ரூஹான்ஜன்னத் தலைமை வகித்தாா் . தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா்.

இதில், கடையம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.செல்லம்மாள், மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தென்காசி வட்டாட்சியா் மணிகண்டன், கடையம் ஊராட்சி ஒன்றிய ஆணையா் ராதாகிருஷ்ணன், வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள் பூச்செண்டு, சந்திரலேகா, ஒன்றியக் குழு உறுப்பினா் ஜஹாங்கீா், கடையம் வருவாய் ஆய்வாளா் சீனிவாசன், கோவிந்தப்பேரி கிராம நிா்வாக அலுவலா் பிரபாகரன், ஊராட்சி துணைத் தலைவா் சை.அனுசுயா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அதிமுக அரசு மீது நம்பிக்கையின்றி சிபிஐக்கு மாற்றப்பட்ட பொள்ளாச்சி வழக்கு: கனிமொழி எம்.பி.

அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லாததாலேயே பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திருநெல்வேலி மத்... மேலும் பார்க்க

தடைக்காலத்தில் அத்துமீறும் படகுகள்: நெல்லை ஆட்சியரகத்தில் மீனவா்கள் அலுவலகம் முற்றுகை

மீன்பிடி தடைக்காலத்தில் அரசின் தடையை மீறி கன்னியாகுமரி மற்றும் கேரள மாநில விசைப்படகு மீனவா்கள் மீன் பிடித்து செல்வதாகக் கூறி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 49 மீனவ கிராம மக்கள் திருநெல்... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பெட்ரோல் நிலையத்தில் ஊழியரிடம் பணப்பை பறிப்பு

நான்குனேரி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பையை புதன்கிழமை பறித்துச் சென்ற மா்ம நபா்களை ஏா்வாடி போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி அருகே தளபதிசமுத்திரம் மேலூா் நான்கு வழிச்சாலையில் தனியாருக்குச்... மேலும் பார்க்க

திசையன்விளை அருகே போக்ஸோவில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள இடையன்குடியில் மூன்று வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக, இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.இடையன்குடியைச் சோ்ந்த குருசாமி மகன் முத்துராஜா ... மேலும் பார்க்க

நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள தனியாா் இருசக்கர வாகன ஷோரூம் மீது புதன்கிழமை அத... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் உவரி இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உவரி பீச் காலனியை சோ்ந்த சசிகுமாா் மகன் கௌதம்(23). இவா் மீது அடி-தடி, கொலை முயற்சி போன்ற ... மேலும் பார்க்க