செய்திகள் :

திகாவில் உள்ள ஜெகந்நாதர் கோயிலில் 3 பேர் சுவாமி தரிசனம்!

post image

மேற்கு வங்கத்தின் திகாவில் உள்ள புதிய ஜெகந்நாதர் கோயிலுக்கு 3 லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக இஸ்கான் மூத்த துறவி ஒருவர் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் கடலோர நகரமான திகாவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜெகந்நாதர் கோயிலில் முதலாவது ரத யாத்திரை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வை முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கிவைத்தார்.

தேர் தேர்திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் கோயிலுக்கு வருகை தர வாய்ப்புள்ளதாக சர்வதேச கிருஷ்ண பக்தி சங்கத்தின் (இஸ்கான்) துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

திகா கோயிலில் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் தேவி சுபத்ரா ஆகிய கடவுள்களின் சடங்களுன் மற்றும் பூஜைகளைச் செய்யும் பணி இஸ்கான் நிறுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேச்ரோச்வத்தின் இரண்டு நாள்களில் மொத்தம் மூன்று லட்சம் பக்தர்கள் கோயிலுக்குவருகை தந்தனர். திகாவின் கடலோர மாவட்டங்களில் அவ்வவ்போது மழை பெய்தாலும் பக்தர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் சீராக உள்ளதாக இஸ்கான் துறவி தெரிவித்தார்.

பிரதான சன்னதியிலிருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு கோயிலில் தற்போது ரதங்கள் நிறுத்தப்பட்டுள்ள தெய்வங்களுக்கு முன்பான அனைத்து சடங்குகளும் செய்யப்படுகின்றன.

ஏப்ரல் 30 அன்று ஜெகந்நாதர் கோயில் திறக்கப்பட்டதிலிருந்து சுமார் 33 லட்சம் பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

திகா சங்கர்பூர் மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலோர மாவட்டத்தில் உள்ள திகா மேற்கு வங்காளத்தில் ஒரு மத சுற்றுலா மையமாகவும் மாறியுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

SUMMARY

An estimated three lakh devotees visited the new Jagannath temple in Digha on the day of Rath Yatra and the preceding day, a senior ISKCON monk said.

பாலிவுட் நடிகை மாரடைப்பால் உயிரிழப்பு! மரணத்தில் சந்தேகம்? -போலீஸ் விசாரணை

பிரபல நடிகை ஷேஃபாலி ஜரீவாலா(42) வெள்ளிக்கிழமை இரவு மரணமடைந்தார். மும்பையிலுள்ள தமது வீட்டில் இரவு மயங்கிக்கிடந்த ஷேஃபாலி ஜரீவாலாவை அவரது குடும்பத்தார் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்க... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் தெலுங்கு பெண் பத்திரிக்கையாளர் சடலமாக மீட்பு

தெலங்கானாவில் பிரபல தெலுங்கு பெண் பத்திரிகையாளர் ஸ்வேசா அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையின்படி, 35 வயதான அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என ... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 18 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பதினெட்டு வங்கதேச நட்டவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஐந்து பேர் திருநங்கைகள்போல் மாறுவேடமிட்டு வசித்து வந்ததாகப் போலீஸார் தெரிவ... மேலும் பார்க்க

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: கொல்கத்தா கல்லூரி பாதுகாவலர் கைது

மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் அரசு சட்டக் கல்லூரிக்குள் முதலாம் ஆண்டு மாணவி ஒருவா் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் கல்லூரி பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்... மேலும் பார்க்க

ஜெய்ஷ் பயங்கரவாதிகள் எங்கே? ட்ரோன்.. மோப்ப நாய்கள்.. 3வது நாளாகத் தொடரும் தேடுதல் வேட்டை!

ஜம்மு - காஷ்மீரின் வனப்பகுதியில் பதுங்கியுள்ள 3 ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் 3-வது நாளாக இன்று (ஜூன் 28) ஈடுபட்டுள்ளனர். உதம்பூர் மாவட்டத்தின் பசந்த்கார் வனப்பக... மேலும் பார்க்க

காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி: அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாம் குவாஹாத்தியில் உள்ள காமாக்யா கோயிலில் விரைவில் ரோப்கார் வசதி கட்டப்படும் என மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காமாக்யா கோயிலுக்கு அஸ்ஸா... மேலும் பார்க்க