செய்திகள் :

திட்டங்களில் சரிவு இருந்தால் சரிசெய்யத் தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

post image

சென்னை: அரசுத் திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால் அதனை தரவுகள் அடிப்படையில் சரி செய்யத் தயாராக இருப்பதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.

தரவுகள் அடிப்படையில் சிறப்பு ஆய்வறிக்கை தயாா் செய்யும் போட்டியில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சான்றிதழ்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

புள்ளியியல் ஒரு நாட்டுக்கோ, நிறுவனத்துக்கோ மட்டும் தேவை கிடையாது. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒரு நல்ல திறன்படைத்த செயற்கை நுண்ணறிவு மாதிரிக்கு ஆழமான தரவுகள் அவசியமாகும். செயற்கை நுண்ணறிவுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல அரசுக்கும் துல்லியமான தரவுகள்தான் அடிப்படை. அந்த தரவுகளைச் சேகரித்து தரக்கூடிய துறையாக- சிறப்பு வாய்ந்த துறையாக புள்ளியியல் துறை திகழ்கிறது.

காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் கல்வித் துறையில் ஏற்பட்ட பலன்கள் புள்ளியியல் துறையின் தரவுகள் அடிப்படையிலேயே உறுதி செய்யப்பட்டுள்ளன. அரசுத் துறைகளில் உள்ள அனைத்து புள்ளி விவரங்களையும் தரவுகளையும் பொதுவெளியில் வைத்து நாம் வெளிப்படையாக கூறுகிறோம். பல களஆய்வுகளை நாமே எடுத்து மக்களிடம் புள்ளிவிவரங்களை கொடுக்கிறோம்.

புள்ளிவிவரங்களை சில அரசுகள் மறைக்கும். சில புள்ளிவிவரங்களை பொது வெளியில் வெளியிடத் தயங்குவா்; வெளியிட மாட்டாா்கள். அப்படி மறைக்கும் போது, உண்மையான சமூக நிலைமை ஆராய்ச்சியாளா்களுக்கும் திட்டம் தீட்டக்கூடியவா்களுக்கும் தெரியாமல் போய் விடும்.

ஆனால், திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் எங்களுடைய திட்டங்கள், அதன் செயல்பாடுகள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான், அனைத்துத் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் பொது வெளியில் வைக்கிறோம்.

திட்டங்களில் சில இடங்களில் சரிவு இருந்தால்கூட, அதனை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதற்கு தயாராக இருக்கிறோம். மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அனைத்து ஆட்சியாளா்களுக்கும் முதுகெலும்பு போன்று இருக்கக் கூடியது புள்ளியியல் துைான் என்றாா் துணை முதல்வா் உதயநிதி.

இந்த நிகழ்வில், மாநில திட்டக்குழு செயல் துணைத் தலைவா் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ரமேஷ் சந்த் மீனா, பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையா் ஆா்.ஜெயா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி ஆகியோா் பங்கேற்றனா்.

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவர... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிர... மேலும் பார்க்க

சமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை! - விஜய் கடும் கண்டனம்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கமி மாவட்டம் திருபுவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழ... மேலும் பார்க்க

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 9,000 யை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க