செய்திகள் :

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

post image

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர். இந்த நிகழ்வின் முக்கிய விழாக்களான மகரசங்கராந்தி, மௌனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகியவை நிறைவு பெற்றபோதிலும் உலகெங்கிலும் இருக்கும் பக்தர் அதிகளவில் திரண்டு வந்து புனித நீராடிவிட்டுச் செல்கின்றனர். மேலும், மௌனி அமாவாசையன்று மட்டும் 8 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகரசங்கராந்தியன்று 3.5 கோடி பக்தர்களும் வசந்த பஞ்சமியன்று 2.57 கோடி பக்தர்களும் புனித நீராடினர்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலங்களவை உறுப்பினர் சுதா மூர்த்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புனித நீராடினர். அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் வருவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு போக்குவரத்தும் தடைபடுகிறது.

இதையும் படிக்க:நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

இதனைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் இருந்து சமூக ஊடகவாசி ஒருவர் ரெட்டிட் இணையத்தில் தனது ஆதங்கத்தைக் கொட்டியுள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், “இது எங்கு தொடங்கியது எனத் தெரியவில்லை. பிரயாக்ராஜ் ஒரு முடிவை எட்டியுள்ளது. இதனால், உள்ளூர்வாசிகள் எவ்வாறு வாழ்வது என்று தெரிவில்லை.

கும்பமேளாவுக்கான வேலைகள் கடந்தாண்டில் இருந்து பார்க்கப்பட்டு வருகின்றன. சாலைகள் தோண்டப்பட்டன. புதியதாக பாலங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு மூலையும் அழகுபடுத்தப்பட்டது.

இருப்பினும், கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரயாக்ராஜ் மக்களும் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்து வரும் பக்தர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியாக உள்ளனர். இருப்பினும், அதிகரித்து வரும் கூட்டம் மக்களின் அன்றாட வாழ்க்கை நடத்துவதை கடினமாக்கியுள்ளது.

நாங்கள் 2 மாதங்களாக எங்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கிறோம். எப்போது கூட்டம் தீரும் என்று காத்திருக்கிறோம். 2 கி.மீ போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிலிருந்து வெளிவர ஒரு மணி நேரம் ஆனது. கடவுளை நேசிப்பவர்கள் தயவு செய்து இங்கு வரவேண்டாம். கங்கையும், திரிவேணி சங்கமும் எங்கும் சென்றுவிடாது. பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவதை நிறுத்திக்கொள்ளுங்கள். கூட்டம் குறைந்த பின்னர் நீங்கள் அமைதியாக வந்து நீராடலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

உ.பி.: சமாஜவாதி முன்னாள் எம்எல்ஏ சிறையிலிருந்து விடுவிப்பு

சமாஜவாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ அப்துல்லா ஆஸம் கானுக்கு சிறப்பு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து, 17 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். சிறை வளாகத்தில் காத்திர... மேலும் பார்க்க

ஓமனிலிருந்து தப்பிய 3 தமிழக மீனவா்கள் கா்நாடக கடற்கரையில் பிடிபட்டனா்

ஓமன் நாட்டின் மீன்பிடி படகில் தப்பித்து வந்த 3 தமிழக மீனவா்கள், கா்நாடக கடற்கரைக்கு அருகே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடலோரப் பாதுகாப்புக் காவல் துறையால் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு 22 இந்திய மீனவா்கள் நாடு திரும்பினா்

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள் செவ்வாய்க்கிழமை குஜராத் திரும்பினா். இவா்கள் அனைவரும் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்க... மேலும் பார்க்க

இந்தியா-ஜப்பான் இடையே 2 வார கூட்டு ராணுவப் பயிற்சி தொடக்கம்

ஐ.நா. சாசனத்தின்கீழ் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது இரு படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி ஜப்பானில் அடுத்த 2 வாரங... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: பனாரஸ், லக்னோ ரயில் சேவையில் மாற்றம்

மகா கும்பமேளாவை முன்னிட்டு மண்டபம், யஷ்வந்த்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பம... மேலும் பார்க்க

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை- ராஜ்நாத் சிங் புகழாரம்

‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா். இணையத் தாக... மேலும் பார்க்க