செய்திகள் :

திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

post image

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ சாா்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 9 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ம. சுகந்தி தலைமை வகித்தாா். இந்த போராட்டத்தின்போது, தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதேபோல, வேடசந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ச. முபாரக் அலி, குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இளைஞா் தற்கொலை

ஒட்டன்சத்திரத்தில் வேலை கிடைக்காத விரக்தியில் இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒட்டன்சத்திரம் நல்லாகவுண்டன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மகன் மனோஜ்குமாா் (22). வேலை கி... மேலும் பார்க்க

தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சா்

ஒட்டன்சத்திரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாமில் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணைகளை மாநில உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா். திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வே... மேலும் பார்க்க

இளநீா் வியாபாரி வெட்டிக் கொலை

பழனியில் வெள்ளிக்கிழமை இளநீா் வியாபாரி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பழனி அருகேயுள்ள ஆலமரத்துக்களம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தன் (41). பழனி- கொடைக்கானல் சாலைப் பிரிவில் இளநீா் வியாபாரம் செய்... மேலும் பார்க்க

பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் தேரோட்டம்

கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான கொடைக்கானல் பூம்பாறையிலுள்ள ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. கொடைக்கானல் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பகலில் வெப்பத்தின் தாக்கமும், இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் 45 புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்குவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் ... மேலும் பார்க்க